பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்தவர் மும்பை நடிகை டாப்சி. அதையடுத்து ஆரம்பம், காஞ்சனா -2, வை ராஜா வை படங்களில் நடித்தவருக்கு பின்னர் தமிழில் படங்கள் இல்லை. அதனால் தற்போது இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் டாப்சி. சமீபத்தில்கூட அவர் இந்தியில் நடித்த படம் நான் சபானா என்ற பெயரில் தமிழில் டப்பாகி வெளியானது.
இந்த நிலையில், சமீபத்தில் டாப்சி அளித்த ஒரு பேட்டியில், முதல் காதல் பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, நான் 6 வயதில் இருந்தே காதலித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். யார் அந்த காதலர்? என்று கேட்டபோது, மனிதர்கள் யாரையும் நான் காதலிக்கவில்லை. நடனத்தைதான் காதலித்து வருகிறேன். நடனம் என்னோடு கலந்த ஒன்று. என்னையும் நடனத்தையும் ஒருநாளும் பிரிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் டாப்சி.