600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
திருமுருகன் இயக்கிய மெட்டிஒலி சீரியலில் போஸ் என்ற வேடத்தில் நடித்தவர் வெங்கட். அதன்பிறகு சில சீரியல்களில் நடித்தவர், பின்னர் சினிமாவில் என்ட்ரி ஆனார். ஆனால், சிறிய வேடங்களில்தான் நடித்து வந்தார். இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கிய கவண் படத்தில் வில்லனாக நடித்த போஸ் வெங்கட், தற்போது சில படங்களில் மெயின் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது நான் எதிர்பார்த்தபடி பெரிய வேடங்கள் கிடைக்கவில்லை. சிறிய வேடங்களில் தான் நடித்தேன். என்றாலும், மறுபடியும் டிவிக்கு சென்றால் சினிமாவில் கிடைத்த இடம் போய்விடும் என்பதால் தொடர்ந்து முயற்சி எடுத்தேன். அப்போதுதான் கவண் படத்தில் என்னை முழு வில்லனாக்கினார் கே.வி.ஆனந்த். அது என்னை பேச வைத்து விட்டது. அதனால் இப்போது சில படங்களில் மெயின் வில்லனாக நடித்து வருகிறேன்.
மேலும், நான் சிறிய நடிகனாக இருந்தபோது சில படங்களின் ஆடியோ விழாக்களுக்கு சென்றபோது, என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை. மேடைக்கு அழைக்காததால் ஒரு ஓரமாக நின்று விழாவை பார்த்து விட்டு சென்றேன். அப்போதெல்லாம் மற்ற நடிகர் நடிகைகள் மேடையில் இருப்பது போன்று நமக்கும் ஒரு இடம் கிடைக்காதா? என்ற ஏக்கம் இருந்தது. ஆனால், இப்போது கவண் படத்திற்கு பிறகு எனக்கு அந்த இடம் கிடைத்து விட்டது. ஒரு நடிகனாக அங்கீகரிக்கப்பட்டு விட்டேன் என்று உற்சாகமாக சொல்கிறார் போஸ் வெங்கட்.