தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாகுபலி இரண்டாம் பாகத்திற்கு பிறகு பிரபாசுக்கு உலக அளவில் தனி மவுசு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக வேறு படங்கள் எதிலும் நடிக்காமல் பாகுபலியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த பிரபாஸ் இனி அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார்.
பாகுபலிக்கு பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிரபாஸ் முன்பே அறிவித்திருந்தார். தற்போது பாகுபலி முடிந்து விட்டதால் வீட்டில் அவருக்கு தீவிரமாக பெண் பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தெலுங்கில் உள்ள மேட்ரிமோனியல்களில் 6 ஆயிரம் பெண்கள் பிரபாசை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து பெயர் பதிவு செய்திருக்கிறார்களாம். ஆந்திராவில் உள்ள திருமண தகவல் மைய கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார். இந்தியாவில் ராகுல் காந்திக்கு பிறகு மோஸ்ட் வாண்டட் பேச்சுலராகியிருக்கிறார் பிரபாஸ்.