தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
5 வருட உழைப்பு, முதல் பாகத்தில் 700 கோடி வசூல், இரண்டாம் பாகத்தில் 1000 கோடியை நெருங்கும் வசூல் என இந்தியத் திரையுலகத்தின் 'மிகப் பெரும் பிளாக் பஸ்டர்' திரைப்படத்தை உருவாக்கிய ஹீரோ ராஜமௌலி. இந்திய சினிமா ஒன்று உலக அளவில் இவ்வளவு பெரிய கவனத்தை ஈர்த்தது இதுவே முதல் முறை. இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள தியேட்டர்களில் கூட இந்தப் படம் தொடர்ந்து ஒரு வார காலமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திரையுலகில் இருக்கும் அனைவரையுமே பொறாமைப்பட வைத்துள்ளது.
ஹிந்தியில் இப்படத்தை வெளியிட்ட கரண் ஜோஹர் நேற்று கூட ராஜமௌலியைப் பாராட்டி ஒரு டிவீட் போட்டுள்ளார். “இந்த பத்தாண்டுகளில் பலரும் தொடர்வதற்கான சொந்தக்காரர். என்றென்றும் வணக்கத்திற்கும், மரியாதைக்கும் உரியவர் ராஜமௌலி. அவர்தான் புதிய சூப்பர் ஹீரோ,” எனப் பாராட்டியுள்ளார்.
இதனிடையே, லண்டனில் பிரிட்டிஷ் திரைப்படக் கல்லூரியில் நடைபெற்ற பிரிமியர் ஷோவில் 'பாகுபலி 2' இயக்குனர் ராஜமௌலி, இசையமைப்பாளர் மரகதமணி, அனுஷ்கா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட பிறகு அதுதான் தன்னுடைய கடைசி பாகுபலி பிரமோஷன் என ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
“லண்டனில் நடைபெற்ற கடைசி கட்ட பிரமோஷனுடன் பாகுபலி படத் தொடரின் என்னுடைய வேலைகள் அனைத்தும் முடிந்தது. அனைவருக்கும் என்னுடைய நன்றி,” என ராஜமௌலி டிவீட்டியுள்ளார்.
'பாகுபலி' இரண்டாம் பாகத்திற்கு 'தி கன்குலுஷன்' என வைத்து விட்டதால் 'பாகுபலி 3' வருவதற்கு வாய்ப்பேயில்லை. ராஜமௌலியும் 'பாகுபலி படத் தொடரின்' எனக் குறிப்பிட்டுள்ளதால் வேறு கதையாகவும் இனி 'பாகுபலி' தொடராது என்பது உறுதி.