சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
திரிஷா நடித்துள்ள கர்ஜனை படத்தை இயக்கியிருப்பவர் சுந்தர் பாலு. இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. பாலியல் சம்பந்தப்பட்ட கதையில் தயாராகியுள்ள இந்த படமும் பாகுபலி போன்று பழிவாங்கும் கதையில் உருவாகியிருக்கிறது என்கிறார் இயக்குனர்.
கர்ஜனை படம் குறித்து சுந்தர் பாலு கூறுகையில், நாட்டில் பரவலாக நடந்து வரும் பாலியல் பிரச்சினைகளை மையமாகக்கொண்டு இந்த கர்ஜனை படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் திரிஷாவுக்கும் வில்லனுக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால் பழிவாங்குவார். ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட கோபம் எப்படி பழிவாங்கும் உணர்ச்சியாக மாறுகிறது என்பதுதான் கர்ஜனை.
ஒரு அரை மணி நேரம் அமைதியாக செல்லும் படம் பின்னர் சூடு பிடிக்கும். குறிப்பாக, இடைவேளைக்குப்பிறகு முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள்தான். கதையோட்டம் விறுவிறுப்பாக செல்லும். இந்த படத்தில் சில சண்டை காட்சிகளிலும் நடித்துள்ள திரிஷாவுக்கு முன்னதாகவே பயிற்சி கொடுத்தோம். அதனால் ஸ்பாட்டிக்கு வந்த பிறகு டேக் வாங்காமல் நடித்தார். அதேபோல் க்ளைமாக்சில் வில்லனை திரிஷா பழிவாங்கும் காட்சியில் ஒரு அதிரடியான எமோசனல் பாடல் இடம்பெற்றுள்ளது. ஆக, கர்ஜனையும் பாகுபலி போன்று பழிவாங்கும் கதைதான். பிரச்சினைகள்தான் வேறு என்கிறார் இயக்குனர் சுந்தர்பாலு.