ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரிஷா நடித்துள்ள கர்ஜனை படத்தை இயக்கியிருப்பவர் சுந்தர் பாலு. இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. பாலியல் சம்பந்தப்பட்ட கதையில் தயாராகியுள்ள இந்த படமும் பாகுபலி போன்று பழிவாங்கும் கதையில் உருவாகியிருக்கிறது என்கிறார் இயக்குனர்.
கர்ஜனை படம் குறித்து சுந்தர் பாலு கூறுகையில், நாட்டில் பரவலாக நடந்து வரும் பாலியல் பிரச்சினைகளை மையமாகக்கொண்டு இந்த கர்ஜனை படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் திரிஷாவுக்கும் வில்லனுக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால் பழிவாங்குவார். ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட கோபம் எப்படி பழிவாங்கும் உணர்ச்சியாக மாறுகிறது என்பதுதான் கர்ஜனை.
ஒரு அரை மணி நேரம் அமைதியாக செல்லும் படம் பின்னர் சூடு பிடிக்கும். குறிப்பாக, இடைவேளைக்குப்பிறகு முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள்தான். கதையோட்டம் விறுவிறுப்பாக செல்லும். இந்த படத்தில் சில சண்டை காட்சிகளிலும் நடித்துள்ள திரிஷாவுக்கு முன்னதாகவே பயிற்சி கொடுத்தோம். அதனால் ஸ்பாட்டிக்கு வந்த பிறகு டேக் வாங்காமல் நடித்தார். அதேபோல் க்ளைமாக்சில் வில்லனை திரிஷா பழிவாங்கும் காட்சியில் ஒரு அதிரடியான எமோசனல் பாடல் இடம்பெற்றுள்ளது. ஆக, கர்ஜனையும் பாகுபலி போன்று பழிவாங்கும் கதைதான். பிரச்சினைகள்தான் வேறு என்கிறார் இயக்குனர் சுந்தர்பாலு.