ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுமங்கலி சீரியலில் நாயகனாக நடித்து வந்தவர் பிரதீப். இவரது மனைவி பாவினி ரெட்டி. அவரும் தமிழ், தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார். பிரதீப்-பாவினி ரெட்டி இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். பிரதீப்பின் பெற்றோர் சென்னையிலுள்ள போரூரில் வசித்து வரும் நிலையில், திருமணத்திற்கு பிறகு பாவினி ரெட்டியுடன் ஐதராபாத் பப்புல்லாகுடாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினார் பிரதீப்.
இந்நிலையில், கடந்த 3-ந்தேதி அதிகாலை 3 மணி அளவில் பிரதீப் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டர். அதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். ஆனால், இதுவரை அதற்கான காரணம் என்ன என்பது குறித்த எந்த தகவல்களும்வி சாரணையில் வெளியாகவில்லை.
ஆனால் இதுகுறித்து தமிழ் சின்னத்திரை வட்டார நடிகர்களிடம் விசாரித்தபோது, பிரதீப் தனது குடும்பத்தினருடன் சமீபகாலமாக ஏதோ மனக்கசப்பில் இருந்து வந்ததாக கூறுகிறார்கள். அதேசமயம், அவரது பெற்றோருடன் பிரச்சினையா? இல்லை மனைவியுடன் பிரச்சினையா? என்பது குறித்து தெரியவில்லை என்கிறார்கள்.
இதற்கிடையே, தற்கொலை செய்து கொண்ட அன்று சீரியலில் நடித்து விட்டு இரவு வீடு திரும்பிய பிரதீப், மனைவி பாவினியிடம் சண்டை போட்டதாகவும், அதையடுத்து, வீட்டின் ஹாலில் இருந்த சில பொருட்களை போட்டு உடைத்து விட்டு, தனது அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டதாகவும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் தெரிவித்ததாக சில சீரியல் நடிகர்கள் கூறுகிறார்கள். இதை வைத்துப்பார்க்கையில், பிரதீப்- பாவினி ரெட்டிக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாககூட அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் பேசிக்கொள்கிறார்கள். என்றாலும், போலீஸ் விசாரணையில்தான் நடிகர் பிரதீப் தற்கொலை குறித்த உண்மையான தகவல் வெளியாகும்.