நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
நுார் படத்துக்கு கிடைத்த பாராட்டுகளால், உற்சாகத்தில் இருக்கிறார், சோனாக் ஷி சின்கா. சத்ருகன் சின்காவின் மகள் என்ற முத்திரை விழாமல், தனக்கென,
தனி அடையாளத்தை ஏற்படுத்துவதில் ரொம்பவே மெனக்கெடுகிறார், சோனாக் ஷி.
நுார் படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து...
நண்பர்கள், உறவினர்கள், சக நட்சத்திரங்களிடமிருந்து தொடர்ந்து பாராட்டு வந்து கொண்டே இருக்கிறது. படம் வெளியான சில நாட்களில், கலவையான விமர்சனம் வருமோ என்ற பயம் இருந்தது. இப்போது, அந்த பயம் நீங்கிவிட்டது.
நுார் கேரக்டர் உங்களுக்கு பிடித்திருந்ததா?
பிடித்திருந்ததால் தான் நடித்தேன். இது, பாகிஸ்தானைச் சேர்ந்த எழுத்தாளரின் நாவலை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படம். ஒரு பெண் பத்திரிகையாளர் தான், படத்தின் மையப் புள்ளி. இயக்குனர் அனில் சிப்பி கதை கூறியதுமே, உற்சாகமாகி விட்டேன்;
உடனடியாக, நடிக்க சம்மதித்தேன்.
பத்திரிகையாளராக நடிப்பதற்கு,
உங்களுக்கு ரோல் மாடல் யார்?
தினமும், பல பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். அந்த துறையில், எனக்கு நல்ல நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள் தந்த, 'டிப்ஸ்' எனக்கு உதவியாக இருந்தது.
எப்போதும் உற்சாகமாக
இருக்கிறீர்களே; அதன் ரகசியம் என்ன?
முதலில், நாம் என்ன செய்தாலும், அது சரியானதாகவே இருக்கும் என்ற மனப்பான்மை வேண்டும். வேலையையும், நம் சொந்த வாழ்க்கையையும் சரியாக, 'பேலன்ஸ்' செய்ய வேண்டும். மேலும், எனக்கு கிடைத்த நண்பர்கள்
எல்லாமே, மிகவும் நல்லவர்கள்.
என் குடும்பத்தினரும், என் மீது அன்பை பொழிகின்றனர். நண்பர்களும், குடும்பத்தினரும், எனக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கின்றனர். நம்மை சுற்றி இருக்கும் அனைவரும், நமக்கு ஆதரவாக இருக்கும் போது, வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருப்பது இயல்பு தானே.
அளவுக்கு அதிகமாக
சிந்திப்பது உடலுக்கு
நல்லதா?
கண்டிப்பாக, நல்லது இல்லை. ஒரு விஷயத்தை பற்றி, ரொம்ப ஓவராக சிந்திப்பது, பல பிரச்னைகளை நமக்கு ஏற்படுத்தும். நானும்,
ஒருசில நேரங்களில்
அப்படி சிந்திப்பது உண்டு. ஆனால், என்ன செய்வது, அப்படி சிந்திக்காமல் இருக்க முடியவில்லையே.
உங்களின் நெருங்கிய நண்பர்கள் யார்?
பள்ளி பருவத்திலிருந்தே, நெருங்கிய பழகிய, சாக் ஷி, விதி, போன்ற தோழியர், இப்போதும், என்னுடன் நட்புடன் இருக்கின்றனர். என் சுக துக்கங்களில் அவர்களும் பங்கேற்பர். அதே போல், அவர்களின் சுக துக்கங்களில், நானும்
பங்கேற்பேன்.
பிரபல நட்சத்திரங்களின் மகன்,
மகள்களுக்கு, பட வாய்ப்பு
எளிதாக கிடைக்கும் என, கூறப்படுவது குறித்து...
நீண்ட காலமாகவே, இது போல் சிலர் தொடர்ந்து கூறி வருகின்றனர். எனக்
கென்னவோ, அப்படி எதுவும் எளிதாக கிடைத்து விடாது என்றே தோன்றுகிறது. ஒரு படம் நமக்கு கிடைத்துவிட்டால், அதில் நடிக்க வேண்டிய பொறுப்பு முழுவதும் நம்மையே சேரும். இதற்கு, நம் பெற்றோர் எந்த வகையில் உதவ முடியும்.
'டிவி' நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கும் அனுபவம் குறித்து...
எனக்கு சின்ன வயதில் இருந்தே, நடனம் ஆடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். பிறந்த நாள், 'பார்ட்டி'களுக்கு செல்லும் போது, நடனமாடிய அனுபவம் உண்டு. அதனால், இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக அழைப்பு வந்ததும், ஏற்றுக் கொண்டேன்.
சினிமாவில் உங்களுக்கு யாருடைய நடனம் பிடிக்கும்?
மாதுரி தீட்ஷித்தின் நடனத்துக்கு, நான் அடிமை. அவரது ஒவ்வொரு அசைவையும், கண்கொட்டாமல் பார்த்து ரசிப்பேன். அது போல், தீபிகாவும் நன்றாக நடனம் ஆடுவார். அலியா பட், ஷாகித் கபூர், வருண் தவான் ஆகியோரின்
நடனமும் பிடிக்கும்.