சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
இந்திய சினிமா வரலாற்றில் பாகுபலி-2 படம் ஒவ்வொரு நாளும் புதிய வரலாறு படைத்து கொண்டிருக்கிறது. படம் வெளியான 6 நாட்களில் சுமார் ரூ.770 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.
பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்தவாரம் வெளியானது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற பெரிய கேள்வியோடும், எதிர்பார்ப்போடும் வெளியான இப்படம் உலகம் முழுக்க சுமார் 8000 தியேட்டர்களில் ரிலீஸானது. எதிர்பார்த்தது போலவே படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அரியணைக்காக போட்டி போடும் அண்ணன்-தம்பி கதை என்றாலும், அதை ரசிகர்களுக்கு சொல்லும் விதமாக பிரமாண்ட அரண்மனை, மிரட்டும் கிராபிக்ஸ் என ஒரு சரித்திர படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இயக்கியுள்ளார் ராஜமெளலி. அதுமட்டுமல்ல படத்தை வேறு ஒரு வெலலுக்கு கொண்டு சென்றுவிட்டார் ராஜமெளலி. பாகுபலி, இரண்டு பாகங்களுக்கும் ஐந்தாண்டுகளாக அவர் உழைத்தது வீண் போகவில்லை. அவர் மட்டுமல்ல படத்தில் நடித்த, பணியாற்றிய அத்தனை பேரின் உழைப்பும் இன்றும் படம் வாயிலாக வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கிறது.
தற்போது வரை பாகுபலி வெளியான 6 நாட்களில் உலகம் முழுக்க சுமார் ரூ.770 கோடி வசூலித்திருக்கிறது. வருகிற ஞாயிறு வரை படங்கள் ஹவுஸ்புல் காட்சியாக இருக்கின்றன. நிச்சயம் வருகிற திங்களுக்குள் படம் ரூ.1000 கோடியை தாண்டியது என்று படக்குழு சார்பிலே அறிவிப்பு வெளியானாலும் வெளியாகலாம். இனி ஒரு இந்திய படம் இப்படி வசூல் சாதனை புரியுமா என்று தெரியவில்லை.
அமெரிக்காவில் வெளியான ஹாலிவுட் படங்களின் வசூலில் பாகுபலி 2 மூன்றாம் இடத்தில் இருப்பது இந்தியா சினிமாவுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.