ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் 18 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில்தான் பிரமாண்ட நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட இருக்கிறது. சமீபத்தில் பூமி பூஜை எல்லாம் நடந்தது. இந்த நிலையில் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தில் 33 அடி சாலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில் ஸ்ரீரங்கன் என்பவர் போலீசில் புகார் அளித்தார். மேலும், இது தொடர்பாக அண்ணாமலை மற்றும் ஸ்ரீரங்கன் இருவரும் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்கள்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது இந்த வழக்கு தொடர்பாக சென்னை மாநகராட்சி, நடிகர் சங்கம், நடிகர் சங்க அறக்கட்டளை ஆகியோருக்கு நாளை பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும், "இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். கட்டிடத்தை ஆய்வு செய்யாமல் எப்படி மாநகராட்சி அனுமதி கொடுத்தது. சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?" என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.