வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் தனுஜா. இவர் தான் நடிகைகள் கஜோல் மற்றும் தனிஷாவின் தாயார் ஆவார். மாஜி நடிகைகள் பலர் சுயசரிதை எழுதுவதில் ஆவலாய் உள்ளனர். சமீபத்தில் கூட நடிகை ஆஷா பரேஷின் சுயசரிதை வெளியானது. மும்பையில் சல்மான் கானும், டில்லியில் அமீர்கானும் இவரது சுயசரிதையை வெளியிட்டனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தனுஜாவிடம் உங்களுக்கு சுயசரிதை மீது ஆர்வம் உள்ளதா என்று கேட்டபோது, அவர் கூறியதாவது... "சுயசரிதை மீது எனக்கு நம்பிக்கையில்லை. உயிரோடு இருக்கும் போதே எதற்காக சுயசரிதை வெளியிட வேண்டும். அதற்காக மற்றவர் எழுதுவதை நான் குறை கூறவில்லை, அது அவர்களின் விருப்பம். என்னை பொறுத்தமட்டில் எனக்கு இதில் ஆர்வம் கிடையாது. நான் நிறைய பேட்டிகள் கொடுத்துள்ளேன், என்னைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்புவர்கள் அதை பார்த்து தெரிந்து கொள்ளட்டும். அப்படியே யாராவது என சுயசரிதையை எழுத விரும்பினால் நான் இறந்த பிறகு எழுதட்டும். நான் உயிரோடு இருக்கும் வரை என் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் சுயசரிதையாக வெளியிட விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.