ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல சின்னத்திரை நடிகை சபீதா ராய். தற்போது தாமரை, இளவரசி, வாணி ராணி தொடர்களில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சபீதாராயும், ஒரு தனியார் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவன மேலாளரும் ஒரு அப்பார்ட்மெண்டின் கார் பார்க்கிங்கில் வைத்து ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டார்கள். இந்த காட்சியும், இருவருக்கும் தவறான உறவு இருப்பது போன்றும் செய்தி வெளியானது. இது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், சபீதாவோ, சுகுமாறன் தன்னிடம் வாங்கிய ரூ.20 ஆயிரம் கடனை திரும்பி வாங்கத்தான் அவரது வீட்டிற்கு சென்றதாகவும், அவர் வரச் சொன்னதால் தான் பணத்தை வாங்க சென்றேன், வீட்டிற்கு உள்ளே கூட செல்லவில்லை ஆனால் பணத்தை தர மறுத்ததால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பில் முடிந்தது மற்றபடி வேறு எந்த தவறான உறவும் தங்களுக்குள் கிடையாது. அவரது எனது தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் என்று கூறியிருந்தார்.
கண்ணீர் மல்க விளக்கம்
இந்நிலையில் சபீதா இப்போது பேஸ்புக் லைவில் கண்ணீர் மல்க பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது.... வணக்கம். நடந்த சம்பவம் உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த சம்பவத்தை அடுத்து எனது அம்மா, நீ ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகிய எந்த சமூக வலைதளத்திற்கும் போகக் கூடாது என்கிறார். ஏன் என்றால் கேட்டால் சொன்னதை செய் என்கிறார். நான் என் அம்மாவிடம் நான் அப்படி போகவில்லை என்றால் டிவியில் ஒளிப்பரப்பான விஷயம் உண்மை என்று அனைவரும் நம்பி விடுவார்கள் என்றேன்.
தற்கொலை செய்ய மாட்டேன்
அந்த வீடியோவில் இருப்பது நான் தான், எனது குரல் தான், சண்டை போட்டதும் நான் தான். அதை மறுக்கவில்லை. நான் ஒரு நடிகை என்பதால் இதை செய்தியாக்கி விட்டார்கள். இவ்வளவு நான் அமைதியாக இருந்தது என் அம்மாவிற்காக தான். ஆனால் என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் அப்படி ஒரு செய்தியை பார்த்த பின்னர் தற்கொலை செய்திருப்பார். ஆனால் நான் கண்டிப்பாக தற்கொலை செய்ய மாட்டேன். தற்கொலைக்கு எதிரானவள் நான்.
ஆதாரத்தை காட்டுங்க தற்கொலை செய்கிறேன்
நான் தற்கொலை செய்யாததற்கு 64 வயதில் ஒரு குழந்தை போன்று என் அம்மா உள்ளார். அவரை நான் தான் பார்க்க வேண்டும். வீடியோவில் இருந்தது என்னமோ நான் தான். ஆனால் அதை சித்தரித்து வேறுவிதமாக செய்தி வெளியிட்டுள்ளார்கள். நான் இரண்டு நாள் அங்கு தங்கியிருந்ததாக சொல்லப்படுவதற்கு ஆதாரம் இருக்கா..? ஆதாரத்தை காண்பியுங்கள் நான் இப்போதோ, இல்லை வேறு எங்காவதோ தற்கொலை செய்து கொள்கிறேன்.
இந்த வீடியோவையும் ஷேர் செய்யுங்கள்
அந்த செய்தியை டிவி சேனல் ஒருநாள் தான் ஒளிபரப்பினார்கள். ஆனால் பேஸ்புக், வாட்ஸ்-அப், டுவிட்டர் என சமூகவலைதளங்களில் அதை வெளியிட்டு என்னை அவமானப்படுத்தி விட்டார்கள். அந்த வீடியோவை ஷேர் செய்வதற்கு முன்னர், அது உண்மையா என்று நினைத்தார்களா. அப்படி அந்த வீடியோவை ஷேர் செய்தவர்கள் இப்போது நான் பேசும் இந்த வீடியோவையும் ஷேர் செய்யுங்கள். நடிகர், நடிகைகள் என்றால் இப்படி தான் என்ற எண்ணம் பதிந்து விட்டது.
வீட்டு வேலை செய்வேன்
இன்றைக்கு என் சினிமா வாழ்க்கையே கேள்வி குறியாகிவிட்டது. மனது மிகவும் உடைந்து போய்விட்டேன். என்னால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. என் சினிமா வாழ்க்கையே முடிந்துவிட்டது. இருந்தாலும் தைரியமாக அனைத்தையும் எதிர் கொள்வேன். சினிமா வாய்ப்பு இல்லாவிட்டால் நான் படித்த படிப்பை வைத்து வேலை பார்ப்பேன், இல்லையா வீட்டு வேலை பார்த்தாவது என் அம்மாவை நான் காப்பாற்றுவேன், கண்டிப்பாக தற்கொலை செய்து கொள்ள மாட்டேன், தவறான தொழில் செய்ய மாட்டேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.