கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பாகுபலியின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு ராஜமவுலியின் அடுத்த நகர்வு என்ன என்பதுதான் இந்திய சினிமாவின் எதிர்பார்ப்பு. அவர் முன் நான்கு பாதைகள் உள்ளது. முதல் பாதை அடுத்து மகாபாரதத்தை இயக்குவது. ஆனால் அந்த பணியை கேரள சினிமா தொடங்கிவிட்டது. அடுத்து வீர சிவாஜியின் கதையை படமாக்குவது. இதற்கு மத்திய அரசு நிதி தருவதற்கு கூட முன் வருகிறதாம். அல்லது ஹாலிவுட் படம் இயக்குவது. நான்காவது பாதைதான் இந்திய மக்கள் குறிப்பாக தென்னக மக்களின் எதிர்பார்ப்பு. அது ரஜினி படம் இயக்குவது.
பாகுபலி படத்தை பார்த்துவிட்டு ராஜமவுலியை அழைத்து பாராட்டினார் ரஜினி. "கடவுளே என்னை பாராட்டியது மாதிரி" என்று நெகிழ்ந்தார் ராஜமவுலி. அடுத்து பல முன்னணி திரைக் கலைஞர்கள் ரஜினி, ராஜமவுலி கூட்டணியை வரவேற்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டார்கள். இந்த நிலையில் ரஜினியை வைத்து படம் இயக்குவேன் என்று அறிவித்திருக்கிறார் ராஜமவுலி.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரம் ரஜினி. அவரை இயக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவு. அந்த கனவு எனக்கும் உண்டு. அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன். ரஜினியின் இமேஜுக்கு தகுந்த கதை அமையும்போது அவருடன் இணைந்து பணியாற்றுவேன். அந்த வாய்ப்பு கிடைத்தால் நான் பாக்கியசாலி. என்கிறார் ராஜமவுலி.