‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாகுபலி, முதல் பாகம் வெளியாகும் வரை, பிரபாஸ், தெலுங்கில் முன்னணி நடிகர் கிடையாது. இரண்டாம் வரிசை நடிகர் தான். ஆனால், அந்த படம்
வெளியான பின், அவரது ஒட்டுமொத்த திரையுலக வாழ்க்கையும் மாறிவிட்டது. ஆந்திர, தெலுங்கானா மட்டுமின்றி, நாடு முழுவதும் அவருக்கு ரசிகர்கள்
உருவாகிவிட்டனர். ஹிந்தி நடிகர்களுக்கு கூட கிடைக்காத அந்தஸ்து, தற்போது அவருக்கு கிடைத்துள்ளது. இதனால், அவரை வைத்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, மூன்று மொழிகளில் படம் தயாரிக்கும் டிரெண்ட் தற்போது
உருவாகி உள்ளது. அதில் ஒரு படம் தான், சாஹூ. பிரபாஸ் ரசிகர்களுக்கு
தீனி போடும் வகையில், பக்கா ஆக் ஷன் படமாக இது, உருவாகி உள்ளதாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களின் பல முன்னணி நடிகர்களும் இதில் நடித்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.