'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் ஏமாற்றம் தந்தாலும், இரண்டாவது பாகத்தில் சண்டைக்காட்சி, வசனங்கள் என தனது 'தேவசேனா' கேரக்டரில் மலையளவு பிரமாண்டம் காட்டி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் அனுஷ்கா. இனி மூன்றாம் பாகம் உருவாகுமா என இப்போதே சொல்ல முடியாது தான்.. ஆனாலும் இந்தப்படத்திற்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் மட்டும் இந்த 'தேவசேனா' என்கிற பெயரை உயிர்ப்பாக வைத்திருக்கவே விரும்பினார்.
அதற்காக, தான் இந்தியில் தொலைக்காட்சி ஒன்றிற்காக எழுதி வரும் 'ஆரம்ப்' என்கிற புராண நாடகத்தில் இடம்பெறும் கதாநாயகிக்கு தேவசேனா என பெயர் சூட்டிவிட்டார். திராவிட பாரம்பரியத்தில் வந்த வீர மங்கை இளவரசியாக இந்த தேவசேனா கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளாராம் விஜயேந்திர பிரசாத். இந்த புராண கதையில் தேவசேனா கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார் கார்த்திகா.. ஆம்.. கோ, புறம்போக்கு படங்களில் நடித்து தற்போது படவாய்ப்பில்லாமல் வீட்டில் இருக்கும் அதே கார்த்திகா தான்.