பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நாளை மறுதினம் (மே-5)ஆம் தேதி துல்கர் சல்மான் நடித்துள்ள 'காம்ரேட்ஸ் இன் அமெரிக்கா' (சி.ஐ.ஏ) படம் வெளியாக இருக்கிறது. அமல் நீரத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளர் முரளிதரனின் மகள் கார்த்திகா முரளிதரன் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் தலைப்புக்கேற்றபடி, இந்தப்படத்தின் எழுபது சதவீத காட்சிகள் அமெரிக்காவில் தான் படமாக்கப்பட்டுள்ளன இந்தப்படத்தின் இயக்குனர் அமல் நீரத் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்தியபோது நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்றது. டெக்சாஸ் - மெக்சிகோ இவற்றின் பார்டரில் குற்ற சம்பவங்கள் அதிகம் நிகழ்வது வாடிக்கையான ஒன்று என்பதால் அந்தப்பகுதியில் போலீசாரின் கண்காணிப்பு எப்போதும் அதிகமாகவே இருக்குமாம். ஒருநாள் துல்கர் சல்மான் உட்பட படக்குழுவினர் இரண்டு கார்களில் அந்த எல்லைப்பகுதியின் அருகில் சென்றபோது திடீரென பல போலீஸ் வாகனங்கள் இந்த இரண்டு கார்களையும் சூழ்ந்தன. படக்குழுவினர் அனைவரையும் சுமார் முக்கால் மணி நேரம் துப்பாக்கி முனையிலேயே வைத்து அவர்களை பற்றி விசாரித்தனராம். அதன்பின் அவர்கள் சினிமா படப்பிடிப்பு நடத்த வந்தவர்கள் என்பது உறுதியான பின் தான் அவர்களை விடுவித்தனராம்.