டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தேசிய விருது அறிவிப்பு தொடர்பான சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை. இந்தாண்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டதில் ருஸ்டம் படத்தில் சிறப்பாக நடித்த அக்ஷ்ய் குமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விருதுக்கு அக்ஷ்ய், தகுதியானவர் கிடையாது என்று விமர்சனங்கள் எழுந்தன. அக்ஷ்ய் கூட, நான் தகுதியற்றவன் என்றால் விருதை திருப்பி தந்துவிடுகிறேன் என்றார். இந்நிலையில் அக்ஷ்ய், தேசிய விருதுக்கு தகுதியானவர் தான் என நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து சுனில் ஷெட்டி கூறியிருப்பதாவது... "இது முற்றிலும் தவறு, அக்ஷ்ய் குமார் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். எதற்காக ஒரு படத்தை மட்டும் பார்க்கிறீர்கள். அவருடைய சினிமா வாழ்க்கையை பாருங்கள், சுமார் 100 படங்களுக்கு மேல் அவர் நடித்திருக்கிறார். நிச்சயம் தேசிய விருதுக்கு அக்ஷ்ய் தகுதியானவர் தான்" என்று கூறியுள்ளார்.