துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
பாலிவுட்டின் பிக் பி என போற்றப்படுபவர் நடிகர் அமிதாப் பச்சன். தற்போது, இவர், ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சர்கார் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமான சர்கார்-3 படத்தில் நடித்துள்ளார். இப்படம் முடிந்து அடுத்தவாரம் ரிலீஸாக உள்ள நிலையில் சர்கார்-3 படம் பற்றி, அமிதாப் பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியிருக்கிறது. சர்கார்-3 படத்தில் அமிதாப் பச்சன் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அதுவும் கடவுள் கணபதியை துதி பாடும் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இதற்காக மும்பையில் உள்ள கடற்கரையில் பெரிய செட்டு அமைக்கப்பட்டு விநாயகர் சிலைகள் எல்லாம் வைத்து பாடலை படமாக்கியுள்ளனர்.
இதுப்பற்றி அமிதாப் கூறியிருப்பதாவது... "சர்கார்-3 படத்தில் கணபதி பாடல் பாடியிருக்கிறேன். இப்படியொரு பாடலை பாடியிருப்பதன் மூலம் கடவுளால் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன். மும்பை சித்தி விநாயகர் கோயிலில் இடம்பெறும் கணபதி பாடல் போன்று இந்தப்பாடல் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். இதுப்பற்றி ராம் கோபால் வர்மாவிடம் பேசியபோது அவரும் கண்டிப்பாக செய்வோம் என்றார். நிச்சயம் இந்தப்பாடல் வேறு ஒரு தளத்தில் பக்தியுடன், சென்ட்டிமென்ட்டாக, உருக வைக்கும் பாடலாக இருக்கும்" என்றார்.