விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, தற்போது பத்மாவதி எனும் மற்றுமொரு சரித்திர படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் சஞ்சய் லீலா பன்சாலி, தனது அடுத்தப்படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இப்படம் பற்றி இப்போது புதியதகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அபிஷேக்-பிரியங்கா நடிக்க இருக்கும் படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவில்லையாம், நடிகர் ரோகித் ராய் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுப்பற்றி ரோகித் ராய் கூறியிருப்பதாவது... "இன்னும் எதுவும் உறுதியாகவில்லை, முடிவானதும் சரியான நேரத்தில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும், அதுவரை காத்திருங்கள்" என்று கூறியுள்ளார்.