ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபகாலமாக சின்னத்திரை நடிகர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. கடந்தமாதம் நடிகை மைனா நந்தினியின் கணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இப்போது முன்னணி தமிழ் சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகி வந்த சுமங்கலி தொடரில் முதன்மை ரோலில் நடித்து வந்த நடிகர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். ஐதராபாத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுப்பற்றி சுமங்கலி தொடர் நடிகர்களின் வட்டாரத்தில் விசாரித்தபோது, அவர்களே இந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீரியலில் நன்றாக தான் நடித்து கொண்டிருந்தார். என்ன பிரச்னை என்று எங்களுக்கும் தெரியவில்லை, நாங்களும் இந்த விஷயத்தை அறிந்து அதிர்ச்சியாகி இருக்கிறோம் என்கிறார்கள்.