ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல கதாசிரியர் சித்ராலயா கோபு, தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பாகி வந்த பத்து பதினைந்து வாரங்கள் ஓடும் மினி சீரியல்களுக்கு கதை எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பாட்டிக்கும் பேரனுக்குமான உறவைச் சொல்லும் அவரது கதை ஒன்று தூர்தர்ஷனில் நிராகரிக்கப்பட்டது. ஏவிஎம் நிறுவனத்தார் ஒரு காமெடி படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்து ஏவிஎம்.சரவணன் அதற்கான ஒரு கதையை தேடிக் கொண்டிருந்தார். அப்போது சித்ராலயா கோபுவின் காமெடி தொடரை தூர்தர்ஷனில் பார்த்த ஏவிஎம் சரவணன், அவரை அழைத்து சினிமாவாக எடுக்க வேறு கதைகள் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டார்.
அப்போது அவர் தூர்தர்ஷனால் நிராகரிக்கப்பட்ட கதையை கொடுத்தார். அது ஏவிஎம் சரவணனுக்கு பிடித்துக் போகவே, அதை படமாக தயாரித்தார். அதுதான் பாட்டி சொல்லை தட்டாதே. ராஜசேகர் இயக்கினார். பாட்டியாக மனோரமாவும், பேரனாக பாண்டியராஜனும் நடித்தார்கள். சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார். பாட்டி பேரன் காமெடி கதையாக இருந்தாலும் அதில் ஹாலிவுட் பாணியில் ஒரு காமெடி விஷயம் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஒரு ஹாலிவுட் படத்தில் ஒரு கார் இரண்டாக பிரிந்து பின்பு சேர்வது மாதிரியான ஒரு விஷயத்தை சேர்த்திருந்தார்கள். அதே போன்று இதில் சேர்க்க முடிவு செய்தனர்.
ஏவிஎம் பேரன் எம்.எஸ்.குகன் காரில் ஆர்வம் உள்ளவர் அவர் ஒரு காரை வாங்கி அதனை இரண்டாக பிரித்தார். பின்புறம் காரின் என்ஜினையும், முன்புறம் ஒரு ஆட்டோவின் என்ஜினையும் பொருத்தி பிரிந்து இணையும் காரை உருவாக்கினார். இந்த காரும், கிளைமாக்சில் மனோரமா போடும் சண்டையும் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்தது. படம் பெரிய வெற்றி பெற்றது. படம் ஒடும் தியேட்டர்களுக்கு அந்த சூப்பர் காரை அனுப்பி வைத்தார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் சென்றார்கள். புதுமையான விளம்பரங்களை செய்து படத்தை சூப்பர் ஹிட்டாக்கினர்.