டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் பாபி சிம்ஹா. அதன் பிறகு குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரேஷ்மி மேனனை காதலித்தார். இருவருமே பிற்காலத்தில் திரைப்பட நட்சத்திரங்களானார்கள், நேரம், ஜகிர்தண்டா படங்கள் பாபி சிம்ஹாவை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. இனிது இனிது, பர்மா, மாயா, கிருமி, உறுமீன் படங்கள் ரேஷ்மி மேனனை நட்சத்திரமாக்கியது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு ரேஷ்மி மேனன் நடிப்பதை நிறுத்தி விட்டார். பாபி சிம்ஹா, கோ 2, பாம்பு சட்டை என்று தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது வல்லவனுக்கு வல்லவன், திருட்டுபயலே 2ம் பாகம், கருப்பன் படங்களில் நடித்து வருகிறார். ரேஷ்மி கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் கூட அவருக்கு வளைகாப்பு நடந்தது.
இந்நிலையில், நேற்று ரேஷ்மி மேனன் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்பாவான பாபி சிம்ஹா நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இனிப்பு கொடுத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மருத்துவமனையில் மனைவி ரேஷ்மி மேனனுடன் எடுத்துக் கொண்ட செல்பியையும் வெளியிட்டுள்ளார் பாபி சிம்ஹா.