தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'சிங்கம்-3' படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோதே, சாமி -2 படத்தை இயக்க கமிட்டானார் இயக்குநர் ஹரி. அதன்படி சிங்கம்-3 படத்தை தொடர்ந்து தற்போது 'சாமி-2' படத்தை இயக்கும் வேலைகளில் பிசியாக இயங்கி வருகிறார் ஹரி! விக்ரம், த்ரிஷா நடிக்கும் இந்த படத்தின் வேலைகள் முடிந்ததும் சூர்யாவை வைத்து இயக்கும் புதிய படத்தின் வேலைகளை துவங்க திட்டமிட்டிருக்கிறார் ஹரி!
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இதை முடித்துவிட்டு வேறு ஒரு இயக்குநரின் படத்தில் நடித்து முடித்துவிட்டுத்தான் ஹரியின் படத்துக்கு வர இருக்கிறார்!
மீண்டும் சூர்யா, ஹரி கூட்டணி இணையவிருக்கும் படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜாவின் 'ஸ்டுடியோகிரீன்' நிறுவனமும், சூர்யாவின் '2டி என்டர்டெயின்மெண்ட்' நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன. இது 'சிங்கம்' படத்தின் நான்காம் பாகம் இல்லை என்றும், புதிய கதை களத்தில் உருவாகும் இந்த படம் போலீஸ் கதை இல்லை என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார் இயக்குநர் ஹரி.
சின்ன பட்ஜெட்டில் படத்தை எடுத்து கம்மியான விலைக்கு படத்தை விற்க திட்டமிட்டுள்ளாராம் சூர்யா.