இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கும் சேர்த்து ஒரு படத்தின் வசூலும் வரவேற்பும் எப்படியிருக்க வேண்டும் என்று மேஜிக் காட்டியவர் ரஜினிகாந்த். இன்றைய 100 கோடி, 500 கோடி, 1000 கோடி வசூல் எல்லாவற்றிற்கும் ரஜினிகாந்த் படங்களின் வசூல்தான் முன்னோடி என்றால் அது மிகையில்லை. தன்னுடைய படங்களாலும், ஸ்டைலாலும், நடிப்பாலும் உலக அளவில் பெரும் ரசிகர்களைப் பெற்றிருப்பவர் ரஜினிகாந்த். அதை கபாலி படம் வரை நிரூபித்துக் காட்டியுள்ளார். 2.0 படம் வந்தாலும் மீண்டும் நிரூபிப்பார்.
பாகுபலி 2 படம் பற்றி பிரேமம் படம் மூலம் மலையாளத் திரையுலகை மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலகை கலக்கிய இளம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “இயக்குனர் ராஜமௌலி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படம் செய்வார் என நம்புகிறேன். அப்படி ஒன்று நடந்தால், உலக பாக்ஸ் ஆபீஸில் அவதார் படத்தின் சாதனை இரண்டாவதாகப் போய்விடும்,” எனக் கூறியுள்ளார். இது அவருடைய முகப்புத்தகத்தில் இட்ட பதிவு. இந்தப் பதிவிற்கு 12000 லைக்குகளும், நூற்றுக்கணக்கான கமெண்ட்டுகளும் வந்துள்ளன.
அப்படி வந்த கமெண்ட்டுகளில் ஒருவர், “அவதார் வசூல் 17000 கோடி. ஒரு முட்டாள்தனமான பதிவு. உங்கள் அக்கவுண்ட் கபாலி கான் ரசிகர்களால் ஹேக் செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது,” என கமெண்ட் போட்டிருக்கிறார். அதற்கு அல்போன்ஸ் அளித்துள்ள அசத்தலான பதிலை ரஜினி ரசிகர்கள் கொண்டாட வேண்டும்.
“நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். அது என்னுடைய விருப்பம். ஏன் நீங்கள் அடுத்த நாட்டிலிருந்து வந்தவர் போல யோசிக்கிறீர்கள். நம் கனவையும், விருப்பத்தையும் ஏன் நாம் ஷேர் செய்யக் கூடாது. செல்போனைப் பார்ப்பதற்கு முன்பு, ஒயர் இல்லாமல் நாமும் பேசுவோம் என்று யோசித்திருக்கிறீர்களா ?. நம் எண்ணத்தில் இல்லாத விஷயங்கள் கூட நடக்கும். நம்பிக்கை என்னை முன்னோக்கிச் செல்ல வைக்கும், தர்க்கம் அல்ல.
நான் தர்க்கமாகப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தால் இயக்குனராக ஆகியிருக்க முடியாது. தர்க்கமாக அது 90 சதவீதம் தவறானது. ஆனால், என் நம்பிக்கை, போராட்டம், பலரைப் பார்த்தும், சுற்றியும், அதிகமாக வேலை பார்த்தும் 10 வருடங்களுக்குப் பிறகு எனக்கு முதல் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது.
ஆக, நான் தர்க்கமாக யோசித்துக் கொண்டிருந்தால், ஒருவன் சில வருடங்களுக்குப் பிறகும் வீடில்லாமல் இருந்திருப்பான். ஒருவன் பைக் இல்லாமல் இருந்திருப்பான். எந்த சிபாரிசும் இல்லாமல் இந்த தொழிலில் பணம் இல்லாமல் இருந்திருப்பான். என் குடும்பம் எனக்கு உதவி செய்தது. அவ்வளவுதான். என் குடும்பத்தினரும் இந்த திரைப்படத் தொழிலில் இல்லை. அவர்கள் எனக்கு மன ரீதியாக ஆதரவு அளித்தார்கள். அவர்களிடமிருந்து அவ்வப்போது பணம் வாங்கியிருக்கிறேன். ஆக, நம்பிக்கையாக இருந்ததால், நீங்கள் நினைப்பதற்கேற்றபடி நேரம் உங்களை நல்ல இடத்தில் கொண்டு சென்றுவிடும். ஆனால், நான் தர்க்கமாக இருந்திருந்தால், நான் என் வீட்டில்தான் உட்கார்ந்து கொண்டிருந்திருப்பேன்.
கடைசியாக ஒன்று. தலைவர் ரஜினிகாந்தின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு பஸ் கண்டக்டர். ஒரு நாள் இந்தியாவில் உள்ள அனைத்து பத்திரிகைகளிலும் ரோபோ வெளிவருவதற்கு முன்னால் அவர் புகைப்படம் வந்திருந்தது. ஆகவே, நான் தர்க்கத்தை விட ஹீரோயிசத்தை நம்புகிறேன்,” என கமெண்ட்டில் கிண்டலடித்தவருக்கு பதிலளித்துள்ளார்.
இதைச் சாதாரண பதிவாகவோ, பதிலாகவோ யோசிக்காமல், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள்.
பிரேமம் படத்தை எந்த ஒரு மன தைரியத்துடன் எடுத்து அப்படி ஒரு பெரும் வெற்றியை அல்போன்ஸ் புத்திரன் பெற்றிருப்பார். தான் ஒரு ரஜினிகாந்த் ரசிகர் என வெளிப்படையாகச் சொல்லி, அதைக் கிண்டலடித்தவருக்கும் தன் உழைப்பின் மூலமே தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.
அல்போன்ஸ் புத்திரனின் இந்தப் பதிவுகளையும் அவர் முகப்புத்தகத்தில் அவரைத் தொடர்பவர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி ரசிகர்கள், அல்போன்ஸின் கனவை பாராட்டாமல் இருந்தால் எப்படி...?.