ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபல நடிகை கஜோல். இவர் மும்பையில் தனது நண்பரான ரயான் என்பவரின் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அந்த உணவகத்தின் ஸ்பெஷல் டிஷ், மாட்டு இறைச்சி சூப் என்று கூறப்படுகிறது. இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். கூடவே அந்த சூப் பற்றியும் மிக அருமையான சூப் என்று பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ வைரலானது. கூடவே கஜோலுக்கு எதிராக கண்டன குரல்களும் எழுந்தன. குறிப்பாக பா.ஜ., ஆளும் மாநிலமான மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் சட்ட விரோதமாக எப்படி மாட்டிறைச்சி கிடைத்தது என்று விமர்சனமும் எழுந்தன.
இந்த பிரச்னை வேறுவிதமாக அரசியல் ரீதியாகவும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் பிரச்னை உருவாவதை உணர்ந்த கஜோல் பதறிப்போய் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "நான் பகிர்ந்த வீடியோ தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் பகிர்ந்த வீடியோவில் இருந்தது மாட்டு இறைச்சி கிடையாது, அது எருமை மாட்டின் இறைச்சி தான். இது சட்டப்பூர்வமாக கிடைக்கிறது. இந்த வீடியோ, மத உணர்வுகளைப் புண்படுத்த வாய்ப்புகள் இருப்பதால் இந்த விளக்கத்தை நான் அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.