சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
பாகுபலி படத்தின் தொடர்ச்சியாக வெளியான 'பாகுபலி-2' படத்திற்கு இங்கு மட்டுமல்லாமல் படம் திரையிடப்பட்ட உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள ரசிகர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்த பாராட்டுக்களையும் படத்தை பற்றி செவி வழி செய்தியாக கேள்விப்பட்ட விஷயங்களையும் கவனித்த பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தப்படத்தை பார்ப்பதற்கு ஆவலாக இருக்கின்றனராம். பாகிஸ்தானில் இந்தப்படத்தை திரையிடுமாறு பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காரணம் பாகுபலி-2'வின் இந்தி பதிப்பை வாங்கி வெளியிட்டவர் கரண் ஜோஹர் தான்.. ஆனாலும் பாகிஸ்தான் ரசிகர்களின் கோரிக்கையை கண்டும் காணதது போல தனது வேலைகளை கவனித்து வருகிறாராம் கரண் ஜோஹர்.. அதற்கு காரணமும் இருக்கவே செய்கிறது.. இதற்கு முன் தன்னுடைய 'ஏ தில் ஹே முஹில்' படத்தில் நடிப்பதற்காக பாகிஸ்தானிய நடிகர் ஒருவரை அழைத்துவந்தபோது அவருக்கு மும்பை அரசியல் கட்சிகளிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்பை இன்னும் அவர் மறக்கவில்லையாம். அதனால் தான் 'பாகுபலி-2'வை பாகிஸ்தானில் ரிலீஸ் செய்வது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறாராம் கரன் ஜோஹர்.