பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்திய சினிமாவில் 'கான்' நடிகர்கள் 500 கோடிகளைத் தாண்டி வசூல் சாதனை புரிந்தாலும் மக்கள் மனதில் மிகப் பெரும் 'சூப்பர் ஸ்டார்' ஆக இருப்பவர் ரஜினிகாந்த் மட்டுமே. ரஜினியின் ஹீரோயிசம் எப்படிப்பட்டது என்பதை இந்திய சினிமா ரசிகர்கள் அறிவார்கள். இல்லையென்றால் ரஜினி ஜோக்ஸ் என்பது அவ்வளவு பாப்புலர் ஆகியிருக்குமா ?.
'பாகுபலி 2' படத்தின் மூலம் இந்தியத் திரையுலகில் வசூல் இயக்குனராக உயர்ந்து நிற்கிறார் ராஜமௌலி. ரஜினி, ராஜமௌலி இருவருக்குமே இணைந்து படம் செய்ய வேண்டும் என்பதை நீண்ட நாட்களாகவே சொல்லி வருகிறார்கள். 'பாகுபலி 2' படத்தைப் பாராட்டி ரஜினிகாந்த் டிவீட் செய்ய, அதற்கு ராஜமௌலி பதில் டிவீட் செய்ய கடந்த இரண்டு நாட்களாக அவை பரபரப்பாகி வருகின்றன.
இந்த சமயத்தில் 'பிரேமம்' படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்ட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஒரு கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்.
“இயக்குனர் ராஜமௌலி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படம் செய்வார் என நம்புகிறேன். அப்படி ஒன்று நடந்தால், உலக பாக்ஸ் ஆபீஸில் 'அவதார்' படத்தின் சாதனை இரண்டாவதாகப் போய்விடும்,” எனப் பதிவிட்டுள்ளார்.
'பாகுபலி 2' படம் ஆயிரம் கோடியையும் தாண்டி வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், ரஜினிகாந்த், ராஜமௌலி கூட்டணி இணைந்து ஒரு பிரம்மாண்ட படத்தை எடுத்தால் அது எத்தனை ஆயிரம் கோடியைத் தாண்டும் ?.