இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஜீ தமிழ் சேனலில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மகேஸ்வரி. இவருக்கு ஃபேஷன் டிசைனராகி சென்னையில் ஒரு ஸ்டோர் திறக்க வேண்டும் என்பதுதான் எதிர்கால ஆசையாம். அதனால் தற்போது ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் பயின்று வருகிறார். இதுகுறித்து தொகுப்பாளினி மகேஸ்வரி தினமலர் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
சின்னத்திரையில் தொகுப்பாளினி, நடிகை என செயல்பட்டு வரும் எனக்கு, எதிர்காலத்தில் பிஸ்னஸ் பண்ணலாம் என்ற ஐடியா உள்ளது. அதனால் இப்போது ஃபேஷன் டிசைனிங் பயின்று வருகிறேன். சென்னையில் ஒரு சின்ன ஸ்டோர் ஓப்பன் பண்ணும் ஐடியா உள்ளது. எனக்கு அதில் ஆர்வம் என்பதோடு, பீல்டில் இருப்பவர்களுக்கே டிசைன் பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இப்போது நான் பங்கும் பெறும் நிகழ்ச்சிகளுக்கு தேவையான டிசைன்களை எனது அக்கா லேகா பண்ணி தருகிறார். அவர் ஏற்கனவே இந்த கோர்ஸ் முடித்து டிசைனிங் பண்ணி வருகிறார். அடுத்து நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து டிசைனிங் பண்ண திட்டமிட்டிருக்கிறோம். சின்னத்திரை மட்டுமின்றி சினிமாப் படங்களுக்கும் காஸ்டியூம் டிசைனிங் பண்ணிக்கொடுக்கும் ஐடியா உள்ளது.
மேலும், தற்போது நான் பங்குபெற்றுள்ள ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளர்களுக்கு நல்ல சுதந்திரம் கொடுக்கிறார்கள். குறிப்பாக, இப்போது நாங்கள் நடத்தும் ஷோக்களுக்கு ஸ்கிரிப்டெல்லாம் கிடையாது. வரும் விஐபிக்களைப் பொறுத்து நாங்களே பேசி விடுகிறோம். அது நல்ல இயல்பாகவும் இருக்கிறது. இயக்குனர்களும் இப்படித்தான் பண்ண வேண்டும் என்று சொல்லாமல், எங்களுக்கு ஸ்பேஸ் கொடுக்கிறார்கள். அதனால்தான் எங்களால் நினைத்தபடி பேச முடிக்கிறது. முன்பெல்லாம் இயக்குனர்கள் சொல்வதைத்தான் செய்கிற மாதிரி இருந்தது. இப்போது அது மாறி வருகிறது.
அதோடு, சினிமாவிலும் நல்ல வேடங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. தோழி, அக்கா, தங்கச்சி என நாலு சீனில் வந்தாலும் அந்த கேரக்டர் மனதில் நிற்கிற மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். குறிப்பாக, ப.பாண்டியில் திவ்யதர்ஷினி நடிச்ச மாதிரி கேரக்டர்கள் கிடைத்தால் நடிப்பேன் என்கிறார் மகேஸ்வரி.