தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெரிய நடிகர்கள் நடித்த படங்களோ, பெரிய பட்ஜெட் படங்களோ வெளிவரும் போதும், வெளிவந்த பின்னரும் சர்ச்சைகள் இல்லாமல் இருக்காது. வசூல் ரீதியாக உலக அளவில் சாதித்துக் கொண்டிருக்கும் படமான 'பாகுபலி 2' படம் வெளிவருவதற்கு முன்பும் சர்ச்சைகளைச் சந்தித்தது. இப்போது வெளிவந்த பின்னரும் புதிய சர்ச்சைகள் ஆரம்பமாகியுள்ளன.
ஒரு படத்தைப் பகுத்துப் பார்ப்பதில் விமர்சகர்களையும் மிஞ்சும் அளவிற்கு சிலர் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். அவர்கள் பார்வைக்கு அந்தப் படங்கள் படங்களாகத் தெரிவதில்லை. மாறாக அதில் உள் அர்த்தத்துடன் சொல்லப்பட்ட விஷயங்களையும், மறைமுகமாக சொல்லப்பட்ட விஷயங்களையும் வெளிக்கொண்டு வந்து அவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
படத்தில் 'அரிகட்டிக்க' சாதியை புண்படுத்தும் விதத்தில் சொல்லியிருக்கிறார்கள் என அந்த சாதி அமைப்பின் தலைவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். குறிப்பிட்ட ஒரு வசனத்தை நீக்க வேண்டும், இல்லையென்றால் 'பாகுபலி 2' ஓடும் தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்தப் போவதாகவும், ராஜமௌலி வீட்டின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, 'பாகுபலி 2' தமிழ்ப் பதிப்பில் 'கட்டப்பா'வை 'நாய், அடிமை நாய்' என அசிங்கப்படுத்துவது குறிப்பிட்ட சாதியை அவமானப்படுத்துவதாக உள்ளது என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன. மேலும், 'நாய்' என்ற வார்த்தையை பொதுவாக சென்சார் அமைப்பினர் நீக்கி விடுவார்கள். அப்படியிருக்க இந்தப் படத்தில் எப்படி இடம் பெற அனுமதித்தார்கள் என்பதும் கேள்வியாகியிருக்கிறது.
மற்றொரு பக்கம் படத்தில் 'இந்துத்துவா'வை மையப்படுத்தி பல காட்சிகள் இருக்கின்றன என இந்து அமைப்பினர் அந்தக் காட்சிகளின் சிறப்பைப் பற்றி குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
நடுநிலை சினிமா ரசிகர்கள் ஒரு படத்தை இப்படியெல்லாமா பாகுபடுத்திப் பார்த்து 'பதிவுகள்' போடுவதா, படத்தைப் படமாகப் பாருங்கள் என சொல்லி வருகிறார்கள்.
'கபாலி' படம் வெளிவந்த பின் அந்தப் படத்திற்கும் சாதிய ரீதியிலான கருத்துகள் அதிகமாகப் பரவின. ஆதரவும், எதிர்ப்புமாக பரவிய அந்தக் கருத்துக்களால் படத்திற்கு மேலும் விளம்பரம் கிடைத்தது. அதேபோல, 'பாகுபலி 2' படத்திற்கு சமூக வலைத்தளங்களில் இப்படி கருத்துக்கள் பதிவிடப்படுவது படத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்து மேலும் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவைக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
வசூல் ரீதியாக 'பாகுபலி 2' சாதனை படைத்து வந்தாலும் வரும் நாட்களில் விமர்சன ரீதியாக இன்னும் அதிகமாகப் பேசப்படும்.