தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹாலிவுட்டை பொறுத்தவரை பிரமாண்டமான படங்களை உருவாக்கும்போது இயக்குனருக்கு பக்கபலமாக செகண்ட் யூனிட் டைரக்டர்கள் இருப்பார்கள். படத்தின் முக்கியமான காட்சிகளை இயக்குனர் படமாக்குகிறார் என்றால் மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை இந்த செகண்ட் யூனிட் டைரக்டர்கள் தான் இயக்குவார்கள். சமீபத்தில் எஸ்.எஸ்.ராஜாமௌலியின் இயக்கத்தில் வெளியான 'பாகுபலி-2' படத்திலும் இதே முறைதான் பின்பற்றப்பட்டுள்ளது. அந்தவகையில் ராஜமௌலிக்கு உறுதுணையாக நின்றது அவரது மகன் கார்த்திகேயா தானாம்.
ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா, தனது தந்தையிடம் டைரக்சன் கற்று வருகிறார் என்பது நமக்கு தெரியும். ஆனால் இந்த 'பாகுபலி-2' படத்தில் சில காட்சிகளை, குறிப்பாக ராணா சம்பந்தப்பட்ட போர்க்கள காட்சிகளை செகண்ட் யூனிட் டைரக்டராக இருந்து படமாக்கியது இவர்தானாம். காரணம் ராஜமௌலி, பிரபாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி கொண்டு இருந்தபோது காலத்தை வீணாக்க விரும்பாமல் ராணாவின் காட்சிகளை கார்த்திகேயாவை வைத்து படமாக்க கூறிவிட்டாராம் ராஜமௌலி. அதனாலேயே சில காட்சிகளை படமாக்கும்போது 20 டேக் வரை கூட பொறுமையாக படமாக்கினாராம் கார்த்திகேயா.. காரணம் தனது தந்தை எடுத்த காட்சிகளுடன் இந்த காட்சிகளை இணைக்கும்போது எந்த வேறுபாடும் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாராம் கார்த்திகேயா..
முக்கியமான செய்தி.. தனது தந்தையைபோல டைரக்டர் ஆக விரும்பாமல், ஒரு தயாரிப்பாளர் ஆவதையே லட்சியமாக வைத்துள்ளாராம் இந்த ஜூனியர் ராஜமௌலி.