கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
'பாகுபலி-2' படம் வெளியானதும் அந்தப்படத்தை முதல்நாளே பார்த்தாக வேண்டும் என துடித்த பலரும் முதலில் தெரிந்துகொள்ள விரும்பியது கட்டப்பா ஏன் பாகுபலையை கொன்றார் என்பதாகத்தான் இருந்தது. தற்போது அதற்கான காரணமும் தெரிந்துவிட்டது.. இந்தநிலையில் படம் வெளியாவதற்கு இரண்டு தினங்களுக்கு முன் பிரபல மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம்குமார், கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதற்கு ஒரு அரசியல் கட்சியை கிண்டலடிக்கும் விதமாக ஒரு கூட்டம் ஒன்றில் ஒரு நகைச்சுவையான காரணத்தை கூறியிருந்தார்.
அதாவது போரில் தோற்றுப்போய் பாகுபலியும் கட்டப்பாவும் ஒரு காட்டிற்குள் சென்று பதுங்கினார்களாம். அப்போது தங்கள் நிலை குறித்து வேதனையை வெளிப்படுத்தினாராம் கட்டப்பா.. உடனே பாகுபலி அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக, “எல்.டி.எப் வரும்.. எல்லாம் சரியாகும்” என கூறினாராம். உடனே கட்டப்பாவுக்கு கோபம் வந்து பாகுபலியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டார் என சலீம்குமார் ஒரு விளக்கம் அளிக்க, கூடியிருந்த கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டார்களாம்.
காரணம் எல்.டி.எப் (Left Democratic Front ) என்பது கேரளாவில் தற்போது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியை குறிக்கும்.. ஆளும் அரசின் லட்சணத்தை கிண்டலடிப்பதற்காக கட்டப்பாவையும் பாகுபலியையும் பயன்படுத்தி கொண்டுள்ளார் சலீம்குமார். படம் வெளியான பின் சலீம்குமார் பேசிய அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.