தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த 2015ல் மலையாளத்தில் வெளியான 'குஞ்சிராமாயணம்' மூலமாக எந்த சீரியஸும் இல்லாத ஒரு ஜாலியான நகைச்சுவை படத்தை தந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் பசில் ஜோசப். இவர் அடுத்ததாக மல்யுத்தத்தை மையமாக வைத்து 'கோதா' என்கிற படத்தை இயக்கியுள்ளார். சமீபகாலமாக சில ஹிட் படங்களின் மூலம் கதாநாயகனாக மாறியுள்ள டொவினோ தாமஸ் கதாநாயகனாகவும் தமிழில் 'மாலை நேரத்து மயக்கம்' படத்தில் நடித்தாரே வாமிகா, அவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள்.
இந்தப்படம் வரும் மே-12ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தப்படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடிக்கிறார் வாமிகா. அதனாலேயே இந்தப்படமும் ஆமீர்கானின் 'தங்கல்' படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்கிற மாதிரியாக ஒரு செய்தி பரவ ஆரம்பித்தது.. ஆனால் மல்யுத்த வீராங்கனையாக நடித்துள்ள வாமிகா இதை அடியோடு மறுத்துள்ளார்...
“மல்யுத்தம் என்கிற அம்சம் மட்டுமே இரண்டு படங்களுக்கும் பொதுவானது.. மற்றபடி 'தங்கல்' வேறு.. 'கோதா' வேறு.. இது காமெடி பின்னணியில் உருவாகியுள்ள படம்.. அதுமட்டுமல்ல, 'தங்கல்' ரிலீஸுக்கு முன்பே இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தாமதமானதால் தற்போது 'தங்கல்' படத்துடன் ஒப்பிடப்படுகிறது.. அவ்வளவுதான்” என கூறியுள்ளார் வாமிகா.