ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மாரி படத்தில் வில்லனாக நடித்தபோது நான் மலையாளம் கலந்த தமிழ் பேசியதைக்கேட்டு உன்னையெல்லாம் எப்படி டப்பிங் பேச வைக்கப்போறேனோ என்று தனுஷ் கிண்டல் செய்வார். ஆனால் இப்போது நான் நாயகனாக நடித்துள்ள படைவீரன் படத்தில் மதுரை தமிழ் பேசி நடித்திருக்கிறேன் என்கிறார் விஜய் யேசுதாஸ். அதுகுறித்து அவர் கூறுகையில்,
மாரி படத்தில் வில்லனாக நடித்த பிறகு சினிமாவில் பெரிதாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வமெல்லாம் எனக்கு இல்லை. படைவீரன் படத்திற்காக டைரக்டர் தனா என்னை அணுகியபோதுகூட சின்னதாக ஏதாவது கேரக்டர் கொடுப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றார். நான் பயந்தேன். ஆனால் என்னை சம்மதிக்க வைத்து விட்டார். இந்த படத்திற்காக முழுக்க முழுக்க கிராமத்தில் நடித்தது நல்ல அனுபவம்.
காரணம், சென்னையில் பிறந்து வளர்ந்த நான் அதன்பிறகு அமெரிக்கா போய் விட்டேன். பின்னர் சினிமாவில் பாடத் தொடங்கினேன். ஆனால் கிராமத்து மக்களின் வாழ்க்கையைப்பற்றி எனக்கு தெரியாது. அதனால் இந்த படத்திற்காக கிராமத்துக்கு சென்றது ஒரு புது வாழ்க்கை வாழ்ந்த அனுபவத்தைக் கொடுத்தது. கேரவனில் உட்காரும் டயம் கூட நான் கிராமத்து ஏரியாக்களில் சுற்றி என்சாய் பண்ணிக்கொண்டிருந்தேன். இந்த கிராமத்து வேடத்திற்காக என்னை முழுமையாக மாற்றினார் டைரக்டர்.
மாரி படம் பண்ணும்போது நான் மலையாளம் கலந்த தமிழ் பேசுவதைப்பார்த்து உன்னையெல்லாம் நான் எப்படி டப்பிங் பேச வைக்கப்போறேனோ என தனுஷ் கிண்டல் பண்ணுவார். சென்னையில் பிறந்த வளர்ந்த நான் இந்த படத்தில் மதுரை பாஷை பேசி நடித்தேன். டைரக்டர் தனா கொடுத்த ஒத்துழைப்பினால்தான் என்னால் பண்ண முடிந்தது. நான் பின்னணி பாடத் தொடங்கியபோது சீனியர் இசையமைப்பாளர்களிடம் நிறைய திட்டு வாங்கியிருக்கிறேன்.
அதன்பிறகு சரி பண்ணிக்கொண்டேன். இந்த படத்தில் நான் நடிப்பதில் நிறைய சொதப்பியிருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் கேமராவை எப்படி பார்க்க வேண்டும். எப்படி பர்பாமென்ஸ் பண்ண வேண்டும் என்று என்னை திட்டாமல் என்கரேஜ் பண்ணி வேலை வாங்கினர். எனக்கு ஒரு ஆக்டிங் கோர்ஸ் ரெடி பண்ணிக்கொடுத்தனர். அதேமாதிரி விஜி மாஸ்டர் தனது டான்சரை அனுப்பி நடன பயிற்சி கொடுத்தார்.
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே இசை தான். இளையராஜாவின் இசையில் என் அப்பாவின் குரலை கேட்டு கேட்டு வளர்ந்தவன் நான். இந்த படத்தில் எல்லாமே அமைந்து விட்டது. கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். எனக்கு ரொம்ப நெருக்கமானவர். அது சந்தோசமாக உள்ளது. இந்த படம் படத்தை பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைவீர்கள் என நம்புறேன் என்றார்.