மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை அடுத்து திரி படத்திலும் சுப்ரமணியபுரம் சுவாதியுடன் இணைந்து நடித்துள்ளார் அஸ்வின். சுவாதியுடன் நடித்த அனுபவம் குறித்து அஸ்வின் கூறுகையில்,
திரி படத்தில் கல்லூரி முடித்து விட்டு என்ன பண்ணலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞனை, அந்த கல்லூரில் நடந்த ஒரு விசயம் எந்தமாதிரி பிரச்சினையை சந்திக்க வைக்கிறது என்கிற மாதிரி ரோலில் நடித்துள்ளேன். நான் இந்த படத்திற்குள் வருவதற்கு முன்பே சுவாதி கமிட்டாகியிருந்தார்.
சுவாதி எப்போதுமே ஸ்பாட்டில் துறுதுறு என்றிருப்பார். அவர்கூட நடிக்கும் போது கொஞ்சம் உசாராக இருக்க வேண்டும். நல்லா டாமினேட் பண்ணுவார். சின்ன சின்ன விசயங்களை அழகாக வெளிப்படுத்துவார். அதனால் அவருடன் நடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் மொத்த ஸ்கோரையும் அவரே தட்டிச்சென்று விடுவார். மேலும், இந்த படம் அப்பா மகன் சம்பந்தப்பட்ட கதையில்தான் உருவாகியிருக்கிறது. எனது அப்பாவாக ஜெயபிரகாஷ் நடித்துள்ளார்.
இதுதவிர, இது வேதாளம் சொல்லும் கதை படத்திலும் நடித்து வருகிறேன். அது முடியுற நிலையில் உள்ளது. வீடியோ கேம் டிசைனராக நடிக்கிறேன். விக்ரமாதித்தன் கேம் ஒன்று டிசைன் பண்ணும்போது ஏற்படும் நிகழ்வுதான் அந்த படம். அது ஒரு திரில்லர் படம். சென்னையில் ஆரம்பித்து மத்தியபிரதேஷ், ராஜஸ்தான் எல்லாம் போகும். இதுவரைக்கும் எந்த சினிமாவிலும் பார்க்காத கதையாக இருக்கும். வித்தியாசமான சரித்திர படம். அந்த படத்திற்காக நானும் குருசோமசுந்தரமும் நிறைய ஹோம்ஒர்க் செய்தோம். அது வேற மாதிரி ஸ்கிரிப்ட். இன்டர்நேசனல் பீலில் இருக்கும் ஒரு தமிழ் படம் என்றார்.