பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கி விட்டது. இதற்காக பலரும் நிதி உதவி செய்து வருகிறார்கள். குறிப்பாக நடிகைகள் தங்களால் இயன்ற நிதியை வழங்கி வருகிறார்கள். வளர்ந்து வரும் நடிகையான நிக்கி கல்ராணி 3 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார். இதனை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமனிடம் வழங்கினார்.
இவர் தவிர பழம் பெரும் நடிகை வாணிஸ்ரீ ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ராதா ஒரு லட்சம் ரூபாயும், ஜனனி 40 ஆயிரம் ரூபாயும், சத்யப்பரியா 25 ஆயிரமும், ஜெயசித்ரா 10 ஆயிரம் ரூபாயும் வழங்கி உள்ளனர். இது தவிர புதிய கட்டடத்தில் திருமண மண்டபம் கட்டித் தரும் பொறுப்பை ஜசரி கணேஷ் ஏற்றுள்ளார். பிரியியூ தியேட்ரை சிவகுமார் குடும்பத்தினர் கட்டிக் கொடுக்கிறார்கள். விஷாலும், கார்த்தியும் இணைந்து 10 கோடி கொடுக்கிறார்கள்.