தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஓவியர், நடிகர், தயாரிப்பாளர் ஏ.பி.ஸ்ரீதர் சென்னையை அடுத்து விஜிபி கடற்கரை பூங்காவில் சிலிகான் சிலை மியூசியம் அமைத்துள்ளார். இதில் உலக தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்களின் சிலிகான் சிலைகள் வடிவமைத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு குத்துவிளக்கு வரைந்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் அங்குள்ள சிலிகான் சிலைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். அன்னை தெரசா சிலையை தொட்டு பார்த்தபோது மனம் நெகிழ்ந்தார். பின்னர் கீர்த்தி சுரேஷ் பேசுகையில், 'ஸ்ரீதர் மிகப்பெரிய திறமைசாலி. எந்த ஆர்ட் கேலரி போனாலும் அவர் வரைந்த ஓவியங்கள் இல்லாமல் இருக்காது. இந்த சிலிக்கான் ஐடியா பற்றி சொல்றப்பவே ரொம்ப பிடிச்சிருந்தது. இது மட்டுமல்லாமல் இன்னும் நிறைய ஐடியாஸ் அவரிடம் இருக்கு. எல்லாமே சூப்பராக இருக்கும். இந்த சிலிக்கான் சிலை மியூசியம் ரொம்ப லைவ்வான அழகோட இருக்கு. இதை துவக்கி வைக்க என்னை அழைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசம். என்றார் கீர்த்தி சுரேஷ்.