'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பழம்பெரும் நடிகை யு.ஆர்.ஜீவரத்தினம், சென்டரல் ஸ்டூடியோவில் மேலாளராக இருந்த ரி.எஸ்.வெங்கடசாமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின் இவர் சொந்தமாக மெர்க்குரி பிலிம்ஸ் என்ற திரைப்படக் கம்பெனியை உருவாக்கி அதன் மூலம் 1954-ஆம் ஆண்டு 'போன மச்சான் திரும்பி வந்தான்' என்ற படத்தை முதன்முதலாக தயாரித்தார். இந்தப் படம் ஜீவரத்தினத்திற்கு லாபம் தராவிட்டாலும் நஷ்டம் உண்டாக்கவில்லை. இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான 'வாழ்விலே ஒரு நாள்' படத்தில் சிவாஜிகணேசனும் ஜி.வரலட்சுமியும் இணைந்து நடித்தனர். இந்தப் படம் படுதோல்வி அடைந்தது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளான ஜீவரத்தினம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முன் போய் நின்றார்.
எம்.ஜி.ஆரை வைத்து சிரிக்கும் சிலை என்றொரு படத்தைத் தயாரித்தார்.. இதில் பானுமதி நாயகி, ஸ்ரீதர் இயக்கம். கதை, வசனம், பாடல்களை கண்ணதாசன் எழுதுவதாக முடிவானது, என்.எஸ்.பாலகிருஷ்ணன் இசை அமைக்க ஒப்புக் கொண்டிருந்தார். அந்த படம் ஆரம்பகட்ட அளவிலேயே நின்று விட்டது. நடித்து சம்பாதித்த பணம் அனைத்தையும் பட தயாரிப்பில் இழந்தார் யு.ஆர்.ஜீவரத்தினம். ஸ்ரீதர் படத்தை இயக்க எம்.ஜி.ஆர் இயக்கம் மேற்பார்வையாளராக இருந்தார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை என்று கூறப்பட்டது. ஜீவரத்தினத்திற்காக சிவாஜி நடித்த படம் நஷ்டத்தை கொடுத்தது. எம்.ஜி.ஆர் நடித்த படம் பாதியில் நின்றது. ஏதோ ஒரு வகையில் இருவருமே ஜீவரத்தினத்தை கைவிட்டார்கள்.