இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ராடன் டிவி மேலாளருடன் வாணி ராணி தொடரில் நடித்து வரும் நடிகை சபீதா ராய் நடுரோட்டில் குடுமி பிடி சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ராடன் மீடியா நிறுவனத்தில் மேலாளராக இருப்பவர் சுகுமாறன். இதே போன்று இந்த நிறுவனம் தயாரிக்கும் சீரியலான வாணி ராணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சபீதா ராய். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருப்பதாக கூறப்படுகிறது. சபீதா ராயிடம் ரூ.20 ஆயிரம், சுகுமாறன் கடன் வாங்கியிருப்பதாகவும், இதுதொடர்பாக சுகுமாறனிடம் சபீதா கேட்டிருக்கிறார். சுகுமாறனும் அந்தா தருகிறேன், இந்தா தருகிறேன் என்று இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த அன்று சுகுமாறன், பணத்தை தருவதாக சொல்லி சபீதாவை வீட்டுக்கு வரச் சொல்லியதாக சபீதா தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் வந்த இடத்தில் பணத்தை தராமல் சுகுமாறன் இழுத்தடித்ததன் காரணமாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இது ஒரு கட்டத்தில் கை கலப்பு வரை செல்ல ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் இருவருக்குமே லேசான காயம் ஏற்பட்டது. சண்டையில் சுகுமாறனின் சட்டை கிழிந்தது.
ஆனால் இந்த சம்பவத்தை சிலர் வேறுவிதமாக திரித்து கூறிவிட்டதாக சபீதா வருத்தப்படுகிறார். அதாவது, இருவருக்கும் இடையில் கள்ளக்காதல், அப்படி, இப்படி என்று செய்தி வௌியாகி விட்டது. ஆனால் சபீதாவோ, சுகுமாறன், தனக்கு தந்தை போன்றவர் என்றும், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தான். இருவரும் சண்டை போட்டது உண்மை தான். ஆனால் சிலர் தவறாக செய்தி பரப்பியதால் இப்போது என்னை அந்த சீரியலில் இருந்து நீக்கிவிட்டனர், என் சினிமா வாழ்க்கையே கேள்விகுறியாகிவிட்டது. இந்த செய்தியின் மூலமாக இரண்டு குடும்பத்தின் வாழ்க்கையில் பிரச்னை உண்டாகிவிடும், எனக்கு நேர்ந்த செயல் வேறு யாருக்கும் ஏற்பட கூடாது என்று மிகுந்த வருத்தத்துடன் கூறியுள்ளார் சபீதா.