பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தான் நடித்த சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்த தனுஷ், ப.பாண்டி படத்தில் இயக்குனராக உருவெடுத்தார். அதோடு, ராஜ்கிரணை கதையின் நாயகனாக நடிக்க வைத்து ப்ளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே தனுஷ் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதையடுத்து திரையுலக இயக்குனர்கள் பலரும் தனுஷை பாராட்டினர். இன்னும் சிலர், உடனடியாக ப.பாண்டி அடுத்த பாகத்தையும் எடுக்குமாறும் அவரை கேட்டுக்கொண்டனர்.
ஆனால், தனுஷின் மாமனார் ரஜினி மட்டும், இந்த படத்தின் வெற்றியைப் பார்த்து உடனடியாக அடுத்த படவேலைகளில் தனுஷ் இறங்கிவிடக்கூடாது. அடுத்தபடியாக நீங்கள் நடிப்பதில் கவனத்தை திருப்ப வேண்டும். இன்னும் சில ஆண்டுகளுக்குப்பிறகுதான் அடுத்த படம் இயக்குவது பற்றி யோசிக்க வேண் டும் என்று தனுசுக்கு ஆலோசனையை வழங்கினார். அதை ஏற்ற தனுசும், ப.பாண்டி-2 இப்போது இல்லை. இன்னும் சில ஆண்டுகளுக்குப்பிறகுதான் அந்த படத்தை இயக்குவது பற்றி முடிவெடுப்பேன் என்று கூறியுள்ளார்.