அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
கோவையில் இருந்து சென்னை வந்தபோது ஹிப்ஹாப் தமிழா உள்பட சில ஆல்பங்களுக்கு இசையமைத்திருந்தார் ஆதி. அதிலுள்ள பாடல்களை கேட்டு விட்டு பலரும் வித்தியாசமாக இருப்பதாக அவரிடம் சொன்னார்களாம். ஆனால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா மட்டும், நீங்கள் கண்டிப்பாக ஒருநாள் இசையமைப்பாளராக வருவீர்கள் என்று சொன்னாராம். அப்போதுவரை எதிர்காலத்தில் இசையமைப்பாளராக வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லாமல்தான் இருந்தாராம் ஆதி.
ஆனால், அதன்பிறகு ஹிப்ஹாப் தமிழா ஆல்பத்தை கேட்ட விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் தான் நடித்த ஆம்பள படத்தில் அவரை இசையமைப்பாளராக்கினார். அதையடுத்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை-2, கவண் உள்பட பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமான அவர், மீசை முறுக்கு என்ற படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். ஆக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா கண்டிப்பாக நீங்கள் இசையமைப்பாளராக வருவீர்கள் என்று சொன்னது போலவே சினிமாவில் இசையமைப்பாளராகி விட்டார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அவர் சொன்னது போலவே நான் இசையமைப்பாளராகி விட்டேன். அப்படி இசையமைப்பாளர் ஆனதினால்தான் தற்போது ஹீரோவாகியிருக்கிறேன். நான் இசையமைப்பாளராகியிருக்கா விட்டால் இதெல்லாம் சாத்தியமாகியிருக்காது. இப்படி சொல்லும் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ரெஹானா அக்காள் என் வாழ்வில் மறக்க முடியாத நபராகி விட்டார் என்கிறார்.