'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுபா தம்பி பிள்ளை, இந்திரன் ஆசீர்வாதம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ஏன்டா தலையில எண்ண வெக்கல. அசார், சஞ்சிதா ஷெட்டி, ஈடன், மன்சூரலிகான், யோகிபாபு, அர்ச்சனா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரெஹானா இசையமைத்துள்ளார். வம்சிதரன் முகுந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஆடியோ விழா நேற்று மாலை சென்னையில் நடை பெற்றது. இந்த விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ்-பூர்ணிமா பாக்யராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் கே.பாக்யராஜ் பேசுகையில்,
இந்த படத்திற்கு என்னை அழைத்தபோது கூட படபூஜை என்று நினைத்துதான் வந்தேன். ஆனால் இங்கு வந்து பிறகுதான் படத்தையே முடித்து விட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். இந்த படக்குழு ஒரு யூத் டீமாக தெரிகிறது. இந்த டீம் இந்த படத்தை என்சாய் பண்ணி எடுத்துள்ளனர் என்பது அவர்கள் பேசும்போதே தெரிகிறது. இந்த படத்தில் நடித்துள்ள சிங்கப்பூர் தீபனைப்பற்றி மன்சூரலிகான் பேசினார். அதனால் சிங்கப்பூரில் நடந்த ஒரு விசயத்தைப்பற்றி சொல்கிறேன். ஒருமுறை நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது சில பெண்கள் சேர்ந்து ரயிலில் ஒரு நாடகம் போட்டனர். ஒரே காமெடியாக இருந்தது. ஆனால் அந்த மாதிரி டிராமாக்களை நம்ம ஊரில போட்டால் சண்டைக்கு வந்து விடுவார்கள். டபுள் ஏ கொடுக்கிற அளவுக்கு இருந்தது. நானே டபுள் ஏ கொடுக்கிற அளவுக்குன்னு சொல்றேன்னா பார்த்துக்கோங்களேன். ஆனா நல்ல டீம். அவங்க நடத்தினது சீரியசாகவும் இருந்தது. காமெடியாகவம் இருந்தது. அந்த நாடகம் அவ்வளவு சிறப்பாக இருந்தது. அந்த பெண்கள் அவ்வளவு நன்றாக நடத்தினர்.
இந்த படம் நாயகன் அசார் கண்டிப்பா நல்லா வருவார். அவர் பேசினபோது நிறைய விசயங்கள் கவனித்தேன். நன்றாக உள்வாங்கி பேசுகிறார். அது ரொம்ப முக்கியம். ரொம்ப கேசுவலாக நடந்ததை பேசினார். தட்டுத்தடுமாற்றம் அவரிடம் இல்லை. இயல்பாக பேசினார். நடிப்பது போக வேறு சில திறமைகளும் அவரிடம் இருப்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. கண்டிப்பாக அவர் நல்லா வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மன்சூரலிகான் சினிமாவைப்பற்றி வருத்தப்பட்டுக்கொண்டு பேசினார். உண்மையான நிலவரம் அதுதான். படம் எப்படி எடுக்கிறது என்பது பிரச்சினையே இல்லை. எப்படி ரிலீஸ் பண்ணுவது என்பதுதான் எல்லோருக்குமே பிரச்சினையாக உள்ளது. இது சின்ன படமாக இருந்தாலும் ஏன்டா தலையில எண்ண வெக்கல என வித்தியாசமாக வைத்துள்ளனர். இதைப்பார்த்து சீயக்காய் ஏன் போடல என அடுத்தபட டைட்டில் வரலாம். பெரும்பாலும் அம்மாக்கள்தான் இந்த டைட்டீலை பிடித்துக்கொள்வார்கள். சனிக்கிழமையானால் குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து விடனும் என அலைவார்கள்.
நான் முருங்கைக்காய் பற்றி சொன்னபோது ஒரேயொரு பாய்ண்டில் மட்டும்தான் பார்த்தனர். ஆனால் அதை வேறு விசயங்களுக்கும் பயன்படுத்தலாம். சில நாடுகளில் முருங்கைக்காயை சமையல் பண்றதில்லை. கட் பண்ணி தண்ணீரில் போட்டு தண்ணீரை சுத்தம் செய்யவும் பயன்படுத்துகிறார்கள். மேலும், இந்த படக்குழுவினர் விளையாட்டாய் டைட்டீல் வைத்திருந்தால்கூட அதில் ஏதோ ஒரு மெசேஜ் சொன்ன மாதிரி உள்ளது. இப்போது சினிமாவில் புது டீம் வந்திருப்பதால் இந்த மாதிரி சின்ன படங்கள் வெளியிடுவதற்கு அவர்கள் சரியான உதவிகளை செய்வார்கள் என நம்புகிறேன். சினிமாவில் ஒரு மறுமலர்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். ஏன்டா தலையில எண்ண வெக்கல படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் என்றார்.