டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எஸ்.எஸ்.ராஜமௌலிக்குக் கிடைத்து வரும் வெற்றியையும், வரவேற்பையும் ரசிகர்கள் பாராட்டி மகிழ்கிறார்கள். ஆனால் சக இயக்குநர்களால் எஸ்.எஸ்.ராஜமௌலிக்குக் கிடைத்துள்ள வெற்றியை சகித்துக்கொள்ள முடியவில்லை. மற்ற இயக்குநர்களை நக்கலடிப்பதையே வேலையாக வைத்துள்ள ராம்கோபால்வர்மா பாகுபலி- 2 படம் பற்றி நக்கலடித்தார்.
அவரைப்போலவே, பாகுபலி 2 படத்துக்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தங்கர் பச்சானும் தன்னுடைய கடுப்பை பதிவு செய்துள்ளார்.
"மக்கள் வாழ்வியல் குறித்த திரைப்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் காலம், என்றைக்கு உருவாகுமோ அன்றைக்குத்தான் அரசியலிலும் தெளிவு பெற்றிருக்கிறார்கள் என்று பொருள். அதுவரை பாகுபலி போன்ற திரைப்படங்களும் கொண்டாடப்படும். அவர்களை சீரழித்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அரசியல் பிழைப்பு நடத்தும் கூட்டங்களும் கொண்டாடப்படுவார்கள்” என்று 'பாகுபலி 2' படத்தின் வெற்றி பற்றி தங்கர் பச்சான் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான பாகுபலி 2 படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாகுபலி 2 படம் இந்திய அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.