பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
முன்னணி இயக்குநர்கள் கதை சொல்லப்போனாலே அநியாயத்துக்கு இழுத்தடிப்பாராம் மாதவன். அதுமட்டுமல்ல, கதை கேட்கும்போதே நிறைய கேள்விகள் கேட்டு இயக்குநர்களை திணறிப்பார் என்றும் மாதவன் பற்றி இயக்குநறர்கள் மத்தியில் பேச்சு உண்டு. அப்படிப்பட்ட ஹீரோவான மாதவன், சினிமா அனுபவம் இல்லாத ஏழு இளைஞர்களின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
சினிமா ஆசையில் நிறைய பேர் தங்களது வேலையை உதறிவிட்டு சினிமாவுக்கு வந்து கஷ்டப்பட்டு வருகிறார்கள். அப்படி ஐ.டி.துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் ஏழு இளைஞர்கள் தங்களது வேலையை உதறிவிட்டு, ஒரு படத்தை இயக்கி தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள் முதலில் தேடிப்போனது மாதவனை. அந்த இளைஞர்கள் சொன்ன கதை பிடித்துப்போனதால் அவர்களின் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் மாதவன். சினிமா அனுபவம் இல்லாதவர்களின் படத்தில் நடிக்க மாதவன் எப்படி ஒப்புக்கொண்டார்?
'3 இடியட்ஸ்' படத்தில் அப்பா தன் மகனிடம் என்ஜினியர் வேலைக்கு போக சொல்வார். ஆனால் மகனோ, தனக்கு ஃபோட்டோகிராஃபிதான் பிடிக்கும் என்று கூறி அந்த வேலையை விட்டு வருவார்! அந்த படத்தை பார்த்து விட்டுதான் தங்களது வேலையை விட்டு சினிமா எடுக்க வந்துள்ளதாக அந்த ஏழு இளைஞர்களும் மாதவனிடம் கூறியுள்ளனர். அதைக் கேட்ட மகிழ்ச்சியடைந்த மாதவன் அந்த இளைஞர்களின் படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டாராம்.