ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர் புனித தாமஸ். இயேசு உயிர்தெழுந்த பிறகு நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள் என இயேசுவை தேவ மைந்தனாக ஏற்றவர். கிறிஸ்தவ மதத்தை பரப்ப யேசுவின் சீடர்கள் பல நாடுகளுக்கு பயணித்தபோது கேரளா வழியாக இந்தியா வந்தவர் புனித தாமஸ். மருத்தும், சமூக சேவை, ஆன்மீகம் என பயணித்து கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் கிறிஸ்தவ மதத்தை பரப்பினார். பல தேவாலயங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் அவரால் கட்டப்பட்டது.
கி.பி 52ம் ஆண்டு இந்தியா வந்த புனித தாமஸ் மயிலாப்பூரில் தன் இறுதி காலத்தை கழித்தார். சென்னை மெரீனா பீச்சில் அவர் ஆற்றிய பிரசங்கம் புகழ்பெற்றவை. அவர் பெயிரில்தான் சென்னையின் ஒரு பகுதிக்கு செயிட் தாமஸ் மவுண்ட் என்று பெயர் சூட்டப்பட்டது. கி.பி.72ம் ஆண்டு மயிலாப்பூரில் இறந்தார். அம்புகளால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். அவரது உடமைகள் சாந்தோம் தேவாலயத்தில் உள்ளது.
தமிழ் நாட்டோடும், குறிப்பாக சென்னை மக்களோடும் நெருங்கிய தொடர்புடைய புனித தாமஸ் வாழ்க்கை வரலாற்றை திரைப்பட தயாரிக்க இருக்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த தார்பின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து சிவாஜி புரொடக்ஷன் தயாரிக்கிறது. இதில் ஹாலிவுட் மற்றும் தமிழ் நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தயாராகிறது. நடிகர் நடிகைகள் தேர்வு, படப்பிடிப்பு லொக்கேஷன்கள் தேர்வு உள்ளிட்ட ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டின் துவக்கத்தில் படப்பிடிப்புகள் ஆரம்பமாகிறது.