தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கதை திரைக் கதை வசனம் இயக்கம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்தோஷ் பிரதாப். அதன் பிறகு தாயம் படத்தில் நடித்தார். தற்போது நான் அவளை சந்தித்தபோது, பயமா இருக்கு, பொது நலன் கருதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்தப்படியாக தபால்காரன் என்ற படத்தில் தபால்காரனாக நடிக்க இருக்கிறார்.
ஸ்ரீ வீனஸ் புரொடக்ஷ்ன் சார்பில் வி.எஸ்.பாலமுருகன் தயாரிக்கும் படத்தை தெலுங்கு இயக்குனர் கிரிஷின் உதவியாளர் ராஜ்மோகன் இயக்குகிறார். சந்தோஷ் பிரதாப் ஜோடியாக நிஹாரிகா என்ற புதுமுகம் நடிக்கிறார். லொள்ளுசபா சாமிநாதன், பேராசியர் ஞானசம்பந்தம், டெல்லி கணேஷ், முனீஷ்காந்த், வினோதினி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜி.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறர், நீரோ பிரபாகரன் இசை அமைக்கிறார்.
வெளிநாடு போகிற கனவில் இருக்கும் நாயகனுக்கு தபால்காரன் வேலைகிடைக்கிறது. அரசு வேலையாக இருந்தாலும் வேண்டா வெறுப்பாக விருப்பமில்லாமல் அந்த வேலையில் சேர்கிறான். அங்கு அவனுக்கு பல தவறுகள் தென்படுகின்றன. அதனால் பல முதியோர் பாதிக்கப்படுகின்றனர். அந்தச் சவாலை எதிர்கொண்டு எப்படி தீர்வு காண்கிறான் என்பதே கதை. இப்படத்தில் காதல், காமெடி, செண்டிமெண்ட் என எல்லாமும் இருக்கும். இது ஒரு முழுநீள வணிகப்படம் பொழுது போகிற போக்கில் சமூகக் கருத்தும் சொல்லப்பட்டு இருக்கும் என்கிறார் இயக்குனர் ராஜ்மோகன்.