விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
முருகா, பிடிச்சிருக்கு, கோழிக்கூவுது உள்பட பல படங்களில் நடித்தவர் அசோக். தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் பிரியமுடன் பிரியா என்ற படத்தில் நடித்திருப்பவர், அதர்வாவுடன் ஒத்தைக்கு ஒத்த படத்தில் நடித்துக்கொண்டிருக் கிறார். இந்த படங்கள் குறித்து அசோக் கூறும்போது,
கபாலி பட ரஞ்சித்தின் அசோசியேட் பரமேஷ், ஒத்தைக்கு ஒத்த படத்தை இயக்குகிறார். இது ஒரு கல்லூரி சம்பந்தப்பட்ட கதை. அதர்வாவின் காலேஜ் சீனியராக நான் நடிக்கிறேன். இந்த படத்தில் மகாபாரதத்தில் பீஷ்மர் எப்படி இருந்தாரோ அப்படித்தான் எனது ரோல். கர்ணன்கூட சேர்ந்து அவர் செய்த விசயங்களைப் பார்க்கையில் அவர் நல்லவரா கெட்டவரா என்றே தெரியாது. அதேபோல்தான் இந்த படத்தில் நான் நல்லவனா கெட்டவனா என்றே தெரியவில்லை. அப்படியொரு கேரக்டரில் நடித்து வருகிறேன்.
இதுதவிர பிரியமுடன் பிரியா என்றொரு படத்தில் நாயகனாக நடித்துள்ளேன். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தை ஏ.ஜே.சுஜீத் இயக்கியுள்ளார். சைக்கோ திரில்லர் படம். 4 மணி நேரத்தில் நடக்கும் கதை. ஹீரோவும் நானே வில்லனும் நானே. இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. இந்த படம் தமிழில் என்னை புதுமையான கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் அசோக்.