தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'பாகுபலி 2' படத்தைப் பற்றித்தான் இன்னும் இரண்டொரு நாளைக்கு அனைவரும் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்பா விஜயேந்திர பிரசாத்தின் கதையை, திரையில் எப்படிக் கொடுக்க வேண்டும் என்று பிரமிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. அவர் எதிர்பார்த்த காட்சி அமைப்பை தொழில்நுட்பக் கலைஞர்கள் அவருடைய கற்பனைக்கும் சிறிதும் குறைவில்லாமல் உருவாக்கியும், அமைத்தும் கொடுத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.
பொதுவாக படம் முடிந்தாலே அனைவரும் எழுந்து போய்விடுவார்கள். படம் முடிந்த பின் திரையில் ஓடும் 'என்ட் கிரெடிட்டை' யாரும் உட்கார்ந்து பார்க்க மாட்டார்கள். ஆனால், 'பாகுபலி 2' படத்தில் அதை பார்ப்பவர்கள் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். சுமார் 50 கிராஃபிக்ஸ் நிறுவனங்களாவது இப்படத்திற்கான கிராஃபிக்ஸ் பணியைச் செய்திருப்பார்கள். ஒவ்வொரு நிறுவனத்திலும் சுமார் 100 பேராவது இடம் பெற்றிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் சுமார் 5000 கிராஃபிக்ஸ் கலைஞர்கள் இரவு, பகல் பார்க்காமல் ஒரு 'விஷுவல் பிரம்மாண்டத்தை' நம் கண்முன் கொண்டு நிறுத்தியிருக்கிறார்கள்.
சென்னை, ஐதராபாத், மும்பை, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கிராஃபிக்ஸ் கலைஞர்களின் அயராவது உழைப்பும் 'பாகுபலி 2' படத்தின் பிரம்மாண்டத்திலும் இருக்கிறது. படத்திற்குச் செல்பவர்கள் அந்த 'என்ட் கிரெடிட்டை' பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள். 'பாகுபலி 2' படத்தைப் பாராட்டும் போது அவர்களையும் சேர்த்துப் பாராட்டுங்கள்.