டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எதிர்பார்த்ததை போலவே பாகுபலி-2 படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
2015ம் ஆண்டில் வெளிவந்த 'பாகுபலி' திரைப்படம் ஒரு சரித்திர சாதனையை ஏற்படுத்தியது. முதல்பாகத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற சஸ்பென்ஸ் உடன் முடித்தார் ராஜமெளலி. இப்போது அதற்கான விடையை இரண்டாம் பாகத்தில் சொல்லியிருக்கிறார். அதுவும் முதல்பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாய் இப்படத்தை இயக்கியுள்ளார். டிரைலரிலேயே பாகுபலி-2 படத்தின் பிரமாண்டத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி விட்டார் ராஜமெளலி.
அதனால் தான் என்னவோ, பாகுபலி 2, உலகம் முழுவதும் சுமார் 8000-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பாகுபலி 2 வெளியாகியுள்ளது. இதுதவிர தமிழகத்தில் 650, மலையாளத்தில் 300, ஹிந்தியில் 3000 தியேட்டர், அமெரிக்காவில் மட்டும் 1000 தியேட்டர் என பாகுபலி-2 வியாபார வட்டம் பெரியது. பாகுபலி-2 படத்திற்கு 5 முதல் 6 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பாகுபலி-2 படத்தின் முதல்காட்சி அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமானது. ரசிகர்கள் காலை முதலே பாகுபலி-2 கொண்டாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். பிரபாஸின் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் மிகழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதுமட்டுமல்ல தியேட்டர்களிலும் ரசிகர்களின் ஆராவாரம் ஆர்ப்பரித்து காணப்பட்டன.
பாகுபலி-2 படத்திற்கும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் பார்த்தவர்கள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் பாகுபலி-2 படத்தின் பிரமாண்டத்தை வானளாவி புகழ்ந்து வருகின்றனர்.