டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன், புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்து வரும் விஷால், புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.
இயக்குநர் பொன்ராமிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கடேசன் இயக்கவிருக்கும் இந்தப்படத்தில் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கிறார் விஷால். அவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவிருக்கின்றனர். இந்தப் படத்துக்கு நாளை நமதே என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். நடிப்பில் 1975ல் வெளிவந்த படம் 'நாளை நமதே'. அதன் அடிப்படையில் எம்.ஜி.ஆர். படத்தின் தலைப்பில் விஷால் நடிப்பதாக பப்ளிசிட்டியை தொடங்கிவிட்டனர். நாளை நமதே என்ற தலைப்பில் மலையாளப்பட இயக்குநர் வினயன் இயக்கத்தில் 2009-ல் ஒரு படம் வெளியானது. அந்த தகவலை மறைத்துவிட்டு, எம்.ஜி.ஆர். பட தலைப்பில் விஷால் நடிப்பதாக கூறியுள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே வெளியான படத்தின் தலைப்பை சூட்டினால், அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் ஒரு விதியை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. தற்போது விஷால் நடிக்கும் படத்துக்கு மூன்றாவது முறையாக நாளை நமதே என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளதால், யாரிடம் அனுமதி வாங்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.