'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
மிகப்பெரிய நடிகர்களின் படங்களோ, அல்லது மிகப்பெரியதாக எதிர்பார்க்கப்படும் படங்களோ வெளியாகும்போது வேறு எந்த படங்களும் ரிலீஸாகி ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் மற்றவர்கள். 'பாகுபலி' படத்திற்கு முன் தமிழ்நாட்டிலும் சரி, மலையாளத்திலும் சரி, பிரபாஸ் என்கிற நடிகரா.. யார் அவர் என கேள்வி கேட்கும் நிலை தான் இருந்தது... ஆனால் 'பாகுபலி'யின் பிரமாண்டம் அதை மாற்றியது.. அதற்கு காரணம் எஸ்.எஸ்.ராஜமவுலி.. ஏற்கனவே நான் ஈ, பின்னர் பாகுபலி என பிரமாண்டம் காட்டியதால் ராஜமவுலியின் படம் என்றால் தமிழ்நாடு, கேரளா என இரு மாநிலங்களிலும் தனி மரியாதை உருவாகிவிட்டது..
இதனால் தான் மலையாள திரையுலகில் இந்த வாரம் 'பாகுபலி-2' ரிலீஸை முன்னிட்டு எந்த மலையாள படமும் ரிலீசாகவில்லை.. கேரளாவில் மட்டும் சுமார் 300 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸாகிறது 'பாகுபலி-2'.. இது வழக்கமாக மோகன்லால், மம்முட்டி படங்கள் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களின் எண்ணிக்கையை விட ரொம்பவே அதிகம். கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பன என்கிற சிறிய நகரத்தில் உள்ள மூன்று தியேட்டர்களில் கூட, இரண்டில் பாகுபலி-2'வைத்தான் ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் 'பாகுபலி' என்கிற பெயரின் வீரியத்தை.